Thursday, November 12, 2009

நம்மில்...

மெலிந்து சுருங்கிய
முகத்தினில்
ஒளி சுடர் விடும் கண்கள்
வற்றிக் குறுகிய உடல்
களைத்துத் தொங்கும் கைகள்
அவ்வப்போது
காற்றில் எழுந்து
அனைத்து விரல்களாலும்
எல்லாத் திசைகளிலும்
சித்திரம் வரைந்து
திரும்பும்
மீண்டும் எழுந்து விரையும்
ஓரிடம் நில்லாமல்
முன்னும் பின்னும்
நகரும் கால்களை போலவே
ஓயாமல்
பேசிக்கொண்டிருக்கும்
அவனைப் பார்க்காமல்
மறுதலிப்பது கடினம்
யாருமே கேட்க
மறுக்கும்படி
கூறுவதற்கு
அவனிடம் என்ன இருக்க முடியும்
அப்போதும் பேசியவாறு
அருகில் நின்ற
அவன் கண்களைப்
பரிதாபத்துடன் பார்த்தேன்
உறைய வைக்கும்
ஏளனம்

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer