Tuesday, June 26, 2012

S. ஜானகியின் சிறந்த பாடல்கள்


ஜானகி பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் சிறந்த பாடல்களை பலர் தொகுத்திருக்கக் கூடும். சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள், திரைஇசை தொழில் நுட்பங்கள் மற்றும் மக்கள் விரும்பிய பாடல்களில் அவரின் பங்களிப்பு என பற்பல வகைகளில் பகுத்திருக்கக் கூடும்.

நானும் என் மனதுக்கு பிடித்த ஜானகியின் தமிழ் திரை இசைப் பாடல்களை தொகுத்திருக்கிறேன். இந்தத் தொகுப்புக்கு மேற்கூறிய எவ்வித மேதைமை பொருந்திய அளவீடுகள் இல்லை. இவை முழுக்க முழுக்க என் கணிப்பில், என் ரசனையின் குறைபட்ட வட்டத்துக்குள் என்னை மகிழ்வுடன் உலவ வைத்த தனித்துவம் கொண்ட பாடல்கள் மட்டுமே.

எனக்குப் பிடித்த ஜானகியின் தமிழ் திரை இசைப் பாடல்களின் பட்டியல்

- என்ன மானமுள்ள பொண்ணுன்னு மதுரையில - சின்ன பசங்க நாங்க


- சின்னத்தாயவள் தந்த ராசாவே - தளபதி


- மெட்டியொலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட - மெட்டி, ராஜாவுடன்


- நதியிலாடும் பூவனம் - காதல் ஓவியம்


- ராசாவே உன்ன நம்பி - முதல் மரியாதை


- தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே -


- கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும் - அவள் ஒரு தொடர்கதை


- பூமாலையே தோள் சேரவா - பகல் நிலவு


- வைதேகி ராமன் கை சேரும் காலம் தை மாத நன்னாளிலே - பகல் நிலவு


- நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை - பாலூட்டி வளர்த்த கிளி


- கனவோடு ஏங்கும் இளம் பூங்கிளி - அன்பே ஓடி வா


- மஞ்சக்குளிச்சு அள்ளி முடிச்சு - பதினாறு வயதினிலே


- புத்தம் புதுக் காலை பொன்னிற வேளை - அலைகள் ஓய்வதில்லை


- பூவே பனிப் பூவே நானும் மலர் தானே -


- நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே - ஆத்மா


- கொத்தமல்லிப் பூவே புத்தம்புது காத்தே - கல்லுக்குள் ஈரம்


- எண்ணத்தில் ஏதோ சில்லென்றது - கல்லுக்குள் ஈரம்


- செந்தூரப்பூவே - பதினாறு வயதினிலே


- குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய் - கவிக்குயில்


- அடடட மாமரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலியே - சிட்டுக்குருவி


- தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் சிந்தும் - நிழல்கள்


- என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது


- பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் - கழுகு


- ஓலைக்குடிசையிலே பழஞ் சேலைக்குள் - ஆனந்த்


- அழகு ஆயிரம் உலகம் முழுவதும் - உல்லாச பறவைகள்


- எந்தப் பூவிலும் வாசம் உண்டு - முரட்டுக் காளை


- அன்னக்கிளி உன்னத் தேடுதே - அன்னக்கிளி


- மச்சானப் பாத்தீங்களா - அன்னக்கிளி


- பொன் வானம் பன்னீர் தூவும் இந்நேரம் -


- நாதம் என் ஜீவனே - காதல் ஓவியம்


- காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே - ஜானி


- வசந்தக் கால கோலங்கள் - தியாகம்


- நதியோடும் கடலோரம் ஒரு ராகம் அலைபாயும் - ஆவாரம்பூ


- பூவரசம்பூ பூத்தாச்சு - கிழக்கே போகும் ரயில்


- இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ - கொக்கரக்கோ


- தாழம்பூவே கண்ணுறங்கு தங்கத்தேரே கண்ணுறங்கு


- வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம் - முதல் மரியாதை


- நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு


- தேன் சிந்துதே வானம் - பொண்ணுக்கு தங்க மனசு


- உள்ளம் எல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குளே ஏதேதோ - தூரத்து இடி முழக்கம்


- சுந்தரி கண்ணால் ஒரு சேதி - தளபதி


- எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ


- சின்னக் கண்ணன் அழைக்கிறான் - கவிக்குயில்


- ஏதோ மோகம் ஏதோ தாகம் - கோழி கூவுது


- நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில்



- காற்றுக்கென வேலி கடலுக்கென்ன மூடி - அவர்கள்


- இப்படியோர் தாலாட்டு பாடவா - அவர்கள்


- நினைத்தாலே இனிக்கும் - நினைத்தாலே இனிக்கும்


- பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் - நினைவில் ஒரு சங்கீதம்


- போட்டேனே பூவிலங்கு - பூவிலங்கு


- வான் மேகங்களே வாழ்த்துங்கள் - புதிய வார்ப்புகள்


- அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை


- மௌமான நேரம் இள மனதில் என்ன பாரம் - சலங்கை ஒலி


- பால கனகமய - சலங்கை ஒலி


- தேவன் கோயில் தீபம் ஒன்று - நான் பாடும் பாடல்


- தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ - தூறல் நின்னு போச்சு


- உறவெனும் புதிய வானில் பறந்ததே இதய மோகம் - நெஞ்சத்தைக் கிள்ளாதே


- அழகிய கண்ணே உறவுகள் நீயே - உதிரிப் பூக்கள்


- வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் வேண்டும் - அவள் அப்படித்தான்


- நான் உந்தன் தாயாக வேண்டும் - உல்லாசப் பறவைகள்


- தேனருவியில் நனைந்திடும் மலரோ - ஆகாய கங்கை


- மலர்களே நாகஸ்வரங்கள் மங்கள தேரில் - கிழக்கே போகும் ரயில்


இந்தப் பட்டியலை எழுதி முடித்துப் வாசித்து பார்க்கையில் சில குறிப்புகள் தோன்றுகின்றன:

- ராஜாவின் இசையில்தான்  ஜானகியின் குரல் வளம், வீச்சு மற்றும் நுட்பம் உச்சத்தில் இருந்திருக்கிறது மற்றும் ராஜா ஜானகியின் திறமையை மிக ரசித்து, தெரிந்து அவரை பாட வைத்திருக்கிறார்

- ராஜா ஜானகிக்கென்றே பாடல்களை உருவாக்கி தந்திருக்க வேண்டும்

- வெற்றி பெற்ற ஜானகியின் பாடல்கள் இரண்டு மூன்று பாடல்களாக சில  வெற்றி  பெற்ற படங்களில் இடம் பெற்றிருக்கின்றன - அவர்கள், கவிக்குயில், தளபதி, உல்லாசப் பறவைகள் - இப்படி

இவற்றில் ஒவ்வொரு பாடலுக்கான என் சுய அனுபவ குறிப்புகளுடன் எழுத வேண்டுமென்ற ஆவலிருக்கிறது. பார்ப்போம்.


Sunday, June 24, 2012

Night Safari @ Singapore


A Scene from Ramayana in the room of Banyan Tree Hotel, Bangkok


நண்பனின் கடிதங்கள் - 6



கூடிக் களித்துக் கொண்டாடி
கூட்டம் தவிர்த்து கூட்டம் போட்டு
வாழ்க்கை வாலிபம் வல்லமை
வையகம் வளர்க்கும் பொய் அகம்

நிஜத்தில் தேங்கும் நிச்சயம் - மற்றும்
நித்தமும் வளர்த்த கங்கணம்
உடைத்துச் சேர்த்த உண்மை - முற்றும்
கடைந்து தேர்ந்த கவிதை

காதல் கோர்த்த கற்பனை
கண்ணில் பார்த்த காலம்
சாதல் ஜெயித்த சகம்
சுகத்தில் லயித்த சுயம்

எல்லாம் நானாய் என்னிலும்...
என்னைப் பார்க்கும் உன்னிலும்...

கடந்த நாட்கள் கவிதைகள் சொல்வன
காவிய வித்தென கடிகளும் சுற்றின

வாழ்ந்த நாட்களை வாழ்ந்த விதமோ
வாழும் நாட்களை வாழும் விதமோ
முரணோ இல்லை முதிர்வெனச் சொன்னால்
உடன்பட நிஜமோ ஒவ்வாதி றக்கும்

பரிணாமம் இதுவோ பரிகாரம் எதுவோ
பரிச்சயம் தோற்பின் பரஸ்பரம் எழுமோ
விதியோ வினையோ வேல்விளை யாட்டோ
இருமுனை கூறெனில் எவர்ஜெயிப் பாரோ

பொய்யல்ல நண்பா இதுநம் இடைத்திரை
போலி மூட்டம் பெரும்பொய் நாடகம்
உடையும் நிஜங்கள் உணர்த்தும் சேதி
உனக்கு மட்டுமா எனக்குந் தானே

போருக்குத் தானே புறப்பட்டு வந்தேன்
போர்க்களம் இன்றோ மனதில் தானே
எந்தச் சிலம்பை எவள் உடைத்தாளோ
இந்தப் பரல்கள் எப்படி வந்தன

சொல்லும் வல்லமை எனக்கிலை தோழா
சொப்பன நிஜங்கள் போதும் போதும்

வந்து போகும் வாழ்க்கை போகும்
தந்து போகும் செல்வம் போகும்
வெந்து போகும் உடலும் போகும்
வேகா நிஜங்கள் போதும் போதும்

- ரமேஷ் சண்முகம்
1990 - 91

மூன்றாம் நாள் உயிர்ப்பு



என் மிச்சங்கள் வேண்டும்
இயேசுவின் கை
அப்பத் துணுக்குகள்
பெருக என்னை
விதையுங்கள்

எல்லாச் சிலுவைகளிலும்
என் குருதி
அத்தனைத் சிரசுகளிலும்
என் முள் கிரீடங்கள்

தவமே இதுவும்

விலாக்காயம் பெருகிவோட
மகிழுங்கள்
கவிழ்த்த மதுக்கோப்பையில்
சாறு பருகி
அப்பம் தின்று
மிச்சம் வீசட்டும்
உங்கள் கைகள்

என்னறிவு யாருக்கென
பகடையுருட்டி
பங்கிடுங்கள்

மிச்சம் பொறுக்கும் கைகளுக்கும்
மீதம் வையுங்கள்

ஆயினும்
கைகழுவி விடாதீர்
என் நண்பரே
உம் கைகளை
அந்தப் பிலாத்துவைப் போல்

- 9/10/89

தொலைந்த விளி


மலட்டுப் பறை முழக்கி
முரண்ட கை பொத்தும்
நார் தேடி உதிர் பூக்கள்
அரற்றும் மணம்
கனவுக் கடைவீதியில்
தொலைந்து போன இது
என் விளி

வருணன் பொய்த்து
வான் நோக்கும்
நனவுப் புழுக்கங்கள்
கிழிந்த சேலையின்
ஊசி நூல் துணுக்குகள்
எச்சில் ஒழுக
திகைத்த குழந்தை
அரற்றும் இறுதியில்
அழும்

விழி வழி வழியும்
விளி
விலாசம் தேடி
விரையும்
விளைவெனில்
வினைஎது

எப்புரையின் குருதி
எவர்கைத் தீர்மானம்

தூரிகை நாரென
கண்ணீர் குழைத்து
உணர்ச்சியற்று பூசி
உன் படம் எழுதும்

உதாசீனப் படுத்து
உவகை கொள்
செவி நிறை
சென்று மறை
ஆயின்
கண்ணீர் நாக்கு உன்
காதுளற
விடை விளித்து போ
என் விளியே

- 8/10/89

Thursday, May 10, 2012

An announcement on Childrens' Films - An Introduction in Chennai by Tamil Studio


தமிழ் ஸ்டுடியோ நடத்தும் "சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா"

இடம்:
Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் நாள்: மே 11 - 12 
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை.
அனுமதி: அனைவருக்கும் இலவசம். 

வணக்கம் நண்பர்களே,

தமிழ் ஸ்டுடியோவின் நீண்ட நாள் கனவான சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை இந்த ஆண்டு நடத்துவதில் முதலில் பெருமை கொள்கிறோம். மாற்று திரைப்படங்களுக்கான ரசனை சிறு வயதில் இருந்தே விதைக்கப்பட வேண்டும். திரைப்படம் என்றால் என்ன என்பதற்கான விளக்கங்கள் இன்னொரு திரைப்படத்தின் மூலமே கொடுப்பது சிறந்தது. எனவே அந்த வகையில் இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை நடத்துவதற்கு தமிழ் ஸ்டுடியோ இசைந்துள்ளது. இந்த ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள Don Bosco Institute of Communication Arts (DBICA) அரங்கில் நடைபெற உள்ளது.

திரையரங்கு போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கு முற்றிலும் நவீன வசதி செய்யப்பட்டுள்ளது. திரைப்பட ரசனையை வளர்ப்பதற்கு பார்க்கப்படும் திரைப்படங்களை நல்ல சூழ்நிலையில் பார்க்க வேண்டும். நல்ல குளிர்ச்சியான இந்த அரங்கில் ஒளி ஒலி வசதியும் அருமையாக உள்ளது. எனவே சிறுவர்கள் உலகப் படங்களை பார்ப்பதற்கு ஒரு அருமையான சூழல் முதலில் உருவாகியுள்ளது என்றே நினைக்கிறேன். மேலும் சிறுவர்களை அவ்வளவு எளிதாக புரியாத மற்ற மொழிப் படங்களை பார்க்க வைத்து விட முடியாது. அதுவும் முற்றிலும் தமிழ் திரைப்படங்களை பார்த்து திரைப்படம் என்றாலே பாட்டு, சண்டை, நகைச்சுவை என்று மூழ்கிப் போயிருக்கும் ஒரு தலைமுறையை அவ்வளவு எளிதாக நாம் உலகப் படங்களை பார்க்க வைத்து விட முடியாது. எனவே சிறுவர்களை முதலில் மனதளவில் அதற்காக தயார் செய்துவிட்டு, தேவைப்படும் நேரங்களில் அவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களையும் (பொழுதுபோக்கு திரைப்படங்கள் அல்ல, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்) அளித்து, சிறுவர்களை உலகப் படங்களை பார்க்க வைக்கவே இந்த முதலாண்டில் முயற்சி செய்கிறோம்.

இந்த பரிச்சார்த்த முயற்சி வெற்றி பெரும் பட்சத்தில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா நடைபெறும். குறிப்பாக ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் சிறுவர்களை அழைத்து வந்து இந்த திரைப்பட திருவிழாவில் கலந்துக் கொள்ள செய்வது இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.

 தமிழில் எல்லாருக்கும் தெரிந்த மாயாஜால கதைகளோ, அறிவுரைக் கதைகளோ, அல்லது சிறுவர்களை வைத்து பெரியவர்களுக்கு கதைசொல்லும் 'பசங்க' போன்ற படங்களோதான் இங்கே சிறுவர் திரைப்படங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் ஸ்டுடியோவின் இந்த சிறுவர் உலகத் திரைப்பட திருவிழாவில் குழந்தைகளை மையமாக வைத்து அவர்களின் வாழ்வியலை, அவர்களின் அழகியலோடு படமாக்கி இருக்கும் உலகப் படங்களே திரையிடப்படவிருக்கிறது.

 இந்த திரைப்பட திருவிழாவில் நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு கலந்துக்கொள்ளுமாறு அன்போடு அழைப்பு விடுக்கிறேன். உங்கள் குழந்தைகளோடு வாருங்கள். அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளையாவது அழைத்து வாருங்கள்.

 இடம்: Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் நாள்: மே 11 -12
 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை.
அனுமதி: அனைவருக்கும் இலவசம்.

திரையிடப்படவிருக்கும் படங்கள் & நிகழ்ச்சிகள்:
முதல் நாள்: (11-05-2012), வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு - தொடக்க விழா (விழாவை தொடங்கி வைப்பவர்களும் குழந்தைகளே)

 நிகழ்வில் நடிகர் சார்லி உலகின் மிக முக்கியமான சிறுவர் திரைப்படங்களை பற்றி பேசுவார்.

காலை 11 மணிக்கு - சிறுவர் சினிமா - நூல் வெளியீடு - ஆழிப் பதிப்பகம் (வெளியிடுபவர்களும் குழந்தைகளே)

11 :30 மணிக்கு: ஆயிஷா - தமிழ் குறும்படம் திரையிடல் - 30 நிமிடம்

12 மணிக்கு: The Kid - Charly chaplin 50: 20

 மதியம் 1:10 மணிக்கு: உணவு இடைவேளை

1.50 மணிக்கு: கதைசொல்லியுடன் ஒரு உரையாடல் (குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி, அந்த கதையின் முடிவிலிருந்து சிறுவர்களே ஒரு புதிய கதையை உருவாக்க செய்யும் நிகழ்வு)

 கதைசொல்லி: சாத்தூர் கருப்பசாமி 

மாலை 3 மணிக்கு: The Way Home - Lee Jeong-hyang - 1.28.13

 மாலை 4.30 மணிக்கு: தேநீர் விருந்து

 மாலை 5 மணிக்கு: LE PAPILLON - Philippe Muyl - 1.19.22

 இரண்டாம் நாள்: (12-05-2012), சனிக்கிழமை காலை

9 மணிக்கு: TAARE ZAMEEN PAR - AAMIR KHAN - 2.42.16

11.50 மணிக்கு: மோர் பரிமாறுதல்

 12 மணிக்கு: வேலு சரவணன் மாணவர்களான "நாடக சாலை" அமைப்பை சார்ந்த அறிவழகன் & சுல்தான் நடத்தும் சுக்கா பக்கா குழந்தைகளுக்கான நாடகம்.

 மதியம் 1:20 மணிக்கு: உணவு இடைவேளை

 2 மணிக்கு: சிறுவர்களுக்கான ஓவியப் பயிற்சி - பயிற்சியாளர் - சாத்தூர் கருப்பசாமி

2.30 மணிக்கு: Blame it on Fidel - Julie Gavras - 1.34.24

4.05 மணிக்கு: தேநீர் விருந்து

4 .20 மணிக்கு: Eternity and a Day - Theodoros Angelopoulos - 2.07.29

6.30 மணிக்கு: Landscape in the Mist - Theodoros Angelopoulos - 2.00.00

இரவு 8 .30 மணிக்கு: நிறைவு விழா.

(நிகழ்வில் குழந்தைகளுக்கு தேவையான கால இடைவெளிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் நிறைய பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் சில விமர்சனங்களுக்கும் இடமுண்டு என்று அறிவேன். ஆனால் சிறுவர்களை உலகப் படங்களை பார்க்க வைப்பதற்கு அவர்களை ஒரு திட மனநிலையில் வைத்தே ஆக வேண்டும். இதன் மூலம் மறுநாளே உலகப் படங்களை தேடித் பார்த்துவிடப்போவதில்லை. ஆனால் அதற்கான விதைதான் இந்த சிறுவர் உலகத் திரைப்பட விழா). எனவே அனைவரும் உங்கள் குழந்தைகளோடு இந்த திரைப்பட திருவிழாவிற்கு வருகை தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நிகழ்விற்கு இடம் தந்து உதவிய DBICA மற்றும், நிதியுதவி அளிப்பதாக சொல்லி இருக்கும் ஆழி செந்தில்நாதன், எஸ்.கே.பி. கருணா (இதில் பங்காற்றிய பவா செல்லதுரை), மற்றும் சிங்கப்பூர் நண்பர் சிவா, எப்போதும் போல் தனது பங்களிப்பை நல்கிய நண்பர் யுகேந்திரன், நண்பர் ஜார்ஜ் ஆகியோருக்கு தமிழ் ஸ்டுடியோவின் நன்றிகள் என்று உரியன. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவோர்: மானசி (பவாசெல்லதுரை மகள்), தமிழ்நிலா (கோவி. லெனின் மகள்) சிறப்பாக ஏற்பாடு செய்யப்படவிருக்கும் இந்த நிகழ்விற்கு அதிகமான நிதியுதவி தேவைப்படுகிறது. நீங்களும் உதவ விரும்பினால் தொடர்பு கொள்ளலாம்.

அருண் மோ. 9840698236

Pandit Venkatesh Kumar and Raag Hameer