Sunday, June 29, 2008

நீ


என் அம்மை நீ
என் அப்பன் நீ
தம்பி நீ, அண்ணன் நீ
தங்கை நீ, தமக்கை நீ
மனைவி நீ, நல்ல துணைவி நீ
மகள் நீ மகன் நீ
இல்லறம் நீ பொருள் நீ
இன்பம் நீ அளவிலா துன்பம் நீ
தீதிலா நட்பும் நீ
முன்னம் நீ, பின்னம் நீ
கண்ணீரும் நீ களியும் நீ
என் தெய்வம் நீ

அவை


"எங்குமுள யாங்கனுமில"
ஆவேசங்கள் அவையறியும்
வழுவிச்செல்லும்
காலத்தின்
சிதைந்த பக்கங்களில்
வண்ணத்து பூச்சியின்
பதிவற்ற தடங்கள்
பெருமூழியின் பிம்பங்களென
அவைதம் இருப்பை
உறுதி செய்யும்
மறைக்கப்பட்ட
விந்து குருதி கண்ணீர்
உணரும் வன்மையன
உண்டென்னும் சிலர்
அன்றென்னும் பலரிடையே
நதிவிழுந்த பிண்டங்களில்
நீர் துடிப்பது போல்
நினைவின் சுழல்களில் நிலைத்து வாழும்

indru


கனவுகள்
உதிர்ந்து கிடக்கும்
சாலையில்
உன் காலடி
புதையுறும்
பூக்களின்
இதழ் நிறங்கள்
உன் பாத சிவப்பை
ஒற்றாவா?
காற்றில்
மிதந்து திரியும்
மகரந்தம்
உன்
சுவாச நறுமணம்
பற்றாதா?
இழக்க பெறாமல்
கைமிஞ்சும்
யாசகனின்
காசுகள் போல்
இறுகி கிடக்கும்
அந்தரத்துக்குள்
இன்று
உடையும்
மகரக்கட்டு


உணர்வுகள் பிறழ்ந்து
விழிகளும் வெறிக்கும்
இவன்முன்
இருள்திரை விலக்கா
மன உறவுகள்
சொல்லிற் சிதையும்
நட்புகள்
அந்தகாரம் சூழும்
மினிச்சுடர் அற்ற அந்த பார்வையின்
நாசியோடும் இழைக்காற்றை
உறிஞ்சி விட்டாலும்
தெரியாத இவனுக்கு
முன்பின் தடம் புரளும்
கவிதை
இதுவென்று மட்டும்
தெரிந்து விடுமா

Pandit Venkatesh Kumar and Raag Hameer