Showing posts with label Philosophy - Tamil. Show all posts
Showing posts with label Philosophy - Tamil. Show all posts

Monday, November 12, 2012

5 குறுங்கவிதைகள்

கற்றுக் கொண்டவைகளை கணக்கு வைத்திருக்கவில்லை
கணக்கும் கற்றுக் கொண்டது  தானே


ஒழுகி விழுந்தது ஒழுக்கம் இடையில்
நழுவித் தொலைந்தன கற்பிதங்கள்



என்னிலிருந்து இறங்கிச் சென்றவனை கண்டேன்
கண்டவனை கண்டு கொண்டேன்


சொற்களை சிந்தி எண்ணங்களை விதைத்து
செயல்களை வேண்டினேன்
அவநம்பிக்கை கிளைத்து அனர்த்தங்கள் விளைந்து
உன்மத்தம் சித்தித்தது


உடனுறைந்தும் தானுணரா தத்துவம்
அனைத்தும் நிறைந்தும் ஆருமறியா  சித்தாந்தம்
உணரக் கூடாத வினைகள்
புரிந்தவை கொண்டு
அளக்க முற்படும்
அறிவின்மை
அளக்க முடியா
அறிவின்மையை அறிவதே
அறிவல்லவா

 

Sunday, November 27, 2011

பொய்மெய்

புதுமை ஒன்றுமில்லை

உறவற்ற உறவையும்
நிரந்தரமான நிரந்தரமின்மையையும்
மறுதலித்தால்
எப்படி சித்திக்கும்
ஞானம்

Sunday, October 2, 2011

அனைத்துமுணர்தல்


யூதாசுக்கு தெரியும்
யேசுவுக்கு தெரியும்
உனக்கு தெரியும்
எனக்கும் தெரியும்
அன்றாட வாழ்வில்
அவரவர்க்கு 
அளந்து தரப்பட்ட
அவரவர் பங்கு துரோகங்கள் 
அஹம் பிரம்மாஸ்மி 

Saturday, April 24, 2010

சிந்தனை வெறுமை

'மூடு அவுட்டாகி விட்டது; படிப்பதில் நாட்டம் இல்லை' என்று எண்ணிக் கொண்டு வெறுமனே தொலைதூரத்தில் ஜன்னலுக்கு வெளியே வெறித்தவாறு ஒரு சந்தோச சோக போர்வையை என்னைச் சுற்றி போர்த்துக் கொள்வதில் ஓர் இன்பம்; ஒரு ரசிப்பு.

காரணம் சொல்லத் தெரியவில்லை. கேட்கின்ற பாடலின் இடையீடு இசை கூட இமைகள் ஈரப்படுத்துகின்ற நேரமது.

நிர்ப்பந்த குளிர்களிலிருந்து நானென்னை காத்துக்கொள்ள பிரயோகிக்கும் ஓர் ஆயுதமாக அந்தப் போர்வை இருக்கலாமோ?

சூரியனைச் சுற்றி மழைக்கால கருமேகம் மெல்லக் கவிந்து காட்சிகளை இருட்டடிப்பு செய்வது போல, எண்ணங்களை வெறுமைப்படுத்தும் இந்நிலை நானே வேண்டுமென்று ஏற்படுத்துவதா அன்றி அச்சூழ்நிலையின் தன்மை குறித்து எற்பதுகிறதா என்று ஆராயும் தெளிவும் மனநிலையும் வெறுமை நிறையும் அக்கணத்தில் இருப்பதில்லை;

அன்றியும், நான் தெளிவடைந்த பிறகும் இவற்றை சிந்திக்க சமயங்களில் நாட்டமும் நேரமும் இருப்பதில்லை என்பதே உண்மை.

சில கணங்களுக்கு சிந்தனை ஸ்மரணை தப்பியிருக்கும்; எந்தச் சூழ்நிலை இந்த சிந்தனை வெறுமையை ஏற்படுத்துகின்றதோ அதிலிருந்து வெளிக்கிளம்புதல் நன்மை பயக்கும்; ஒரு மாறுதல் பழைய இனிமையை, நடைமுறையை என்னில் உடன் கொணரும் என்றொரு மாயை இருப்பதை நான் மறுக்க முடியாது.

இந்த மாயை தன்னுடைய முழு உரு காட்டும் நேரம் தான், நான் அதுவொரு மாயை; அதனால் நான் பெற்றது எதுவுமில்லை என்றறியும் நேரமாயிருக்கும்.

வெறுமை அகோரமாய், கேட்கும் ஒலிகளும் சோக வெறுமையாய், எண்ணக் கோட்டைகள் சரியும் சத்தங்கள் கூட கேட்காது கணங்கள் ஊமைப்படத்தின் பிம்ப நொடிகளாய் நகர, நான் நின்றேனா அமர்ந்தேனா அன்றி படுத்தேனா என தன்னிலை மறப்பதில் ஆரம்பமாகும் அந்த மாயையின் சொரூபம்.

மாயையின் பிரசன்னம் தோன்றியவுடன் சிந்தனை வெறுமை சிதறும்; வெறுமையின் பின் விளைவுகள் தான் மனத்திரையில் பிசாசுகளாய் உலவிக் கொண்டிருக்கும். அவற்றின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் போகும் போதுதான், யாரேனும் என்னைப்பற்றி, என் முகநிலை பற்றி (அகத்தின் அழகு முகத்தில் என்பார்களே) விசாரிக்க, உடனே பின் விளைவுப் பிசாசுகளோ 'பொய் சொல்கிறோம்; தூண்டுகிறோம்' என்ற எண்ணமின்றி கூசாமல், 'ஒன்றுமில்லை' என்று பதிலிறுக்க வைக்கும்.

அவர்கள் அப்படி நகர்ந்ததும், வெற்றிச் சிரிப்புடன் விளைவுப் பிசாசுகள் மீண்டும் கைகட்டி, சிந்தனை மாயைக்கு வழிவிடும். இவையெல்லாம் என் அனுமதியின்றி, என்னைப் பார்வையாளனாக்கிக் கொண்டு எனக்குள்ளே நடைபெறும் நேரம், நொடிகள், நிமிடங்களைத் தாண்டியிருக்கும்.

காலக்குதிரை இழுத்துக் கொண்டோடும் வாழ்க்கை வண்டியின் பாதையில் ஒரு சிறு தூரமாகவே இந்நேரம் இருப்பினும், அந்நேரம்தான் எத்துணை பாதிப்புகளை என்னில் உருவாக்குகிறது?

ஒரு வளரும் ஓவியன் கையிற் கிடைத்த வண்ணங்களை எல்லாம் வேந்திரையிர் கொட்டி கோலம் செய்து அழகு பார்ப்பது போல்.

புதுக்கவிஞன் ஒருவன் தானறிந்த சொற்களையெல்லாம் அழகுடனோ அவலமாகவோ அடுக்கி ரசிப்பது போல்.

நடக்கக் கற்றுக்கொண்ட குழவி தன தளர்நடையில் உலகையே அளந்து விட அங்குமிங்கும் அலைந்து திரிவது போல்.

புதிதாய் பூப்படைந்த பெண்ணை தாய் தடவித் தடவி அகமகிழ்ந்து நெட்டி முறித்து செய்வதறியாது திகைப்பது போல், என் மனம் தனக்குள்ளே அலைகிறது.

நான் அந்நேரம் அதைக் கட்டுபடுத்தி சுயநிலைக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டால், எங்கே ஒரு செயற்கையான காரியம் செய்கிறோமோ, மனதின் விடுதலைக்கு துரோகம் இழைக்கிறோமோ எனும் பயமும் உடன் எழும்புகிறது.

ஆகையால்தான் அம்முயற்சியில் இறங்குவதில்லை என்றும் சொல்லிவிடுதல் இயலாது; அது என்னால் முடியுமா என்றவொரு ஐயமும் ஒரு காரணம்.

இவற்றிற்கெல்லாம் இரையாகி, மகிழ்வுமில்லாமல் துன்பமுமில்லாமல் வெறுமையை, சில சமயம் கண்ணீருடனும் ரசித்துக் கொண்டு நின்ற நேரமும் உண்டு.

முன்பு கூறியது போல், அந்நேரத்தின் முடிவில்தான் மாயை உதிக்கும். உதித்ததும் சிந்தனைச் சுழலில் மூழ்கியிருந்த புலன்கள் கரை தட்டும். வெறுமையின் பின்விளைவு பிசாசுகள், மிகவும் சுயாதிகாரத்துடன் 'வெளியே செல், சூழ்நிலை மாற்றம் தேடு' என்று ஆணையிடுவது, நான் தன்னிச்சையாக செய்கிற காரியம் போன்று பிறர்க்கு தோன்றக்கூடும். உடனே என் வாகனத்தை எடுத்துக் கொண்டோ, அன்றி நடந்தோ நான் தனிமையான இடம் என்று கருதும் இடம் வரை வந்து சேர்வேன்.

சமயங்களில் நான் இவ்விடங்களுக்கு வந்து சேரும் வரை வெறுமை என்னை பிணைத்திருப்பதும் நேரும். கிளம்பியவுடன் நன்முறையில் நினைவுடன் அவ்விடம் சென்று அமர்ந்து அதைப்பற்றி சிந்திப்பதும், மாற்ற முயல்வதும் பலமுறை.

இத்தகைய வெறுமையின் பிறப்பிடம் எப்படி, எங்கே, எது என்று ஆராயம் போதுதான் பலவகை கிரியா ஊக்கிகளின் தொடர்பை கண்டேன். பெண்கள், இசை, மணம், கவிதை, துன்பம், அவலம், அதிர்ச்சி.... என்று அவற்றில் தான் எத்துணை வகைகள்!

இவற்றில் ஏதேனுமோன்றோ அன்றி ஒரு சிலவோ சூழ்நிலையின் தன்மைக்குள் என்னை மெதுவே உருமாற்றும். பொதுவாக, இந்த உருமாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் நிலையில் தான் மனம் இருக்கும். அதாவது, எவ்வொரு மாற்றத்திற்கும் உடன்பட்டுவிடக் கூடிய பலவீனம் மனதின் அடித்தளத்தில் தோன்றியிருக்கும் நேரமே, இத்துணை விளைவுகளும் ஏற்படும் நேரம்.

கப்பலின் மேலேயல்லாது, அடித்தளத்தில் ஏற்படும் சிறுபிளவே பெருங்கலத்தை கவிழ்த்தல் போன்று, மனம் பலவீனமாய், வலுவற்றதாய் மாற்றப்பட்டு வெறுமை என்னை ஆக்கிரமிக்க, உதவி புரியும் காரணங்களுள் சில என்னை எப்போதும் ஒட்டிக் கொண்டேயிருக்கும், கர்ணனின் கவச குண்டலன்களைப் போல்.

பெரும்பாலான போதுகளில், நான் என் சுய, சமூக நிர்ப்பந்தங்களுக்காக அவற்றை வெட்டியெறிந்து விட முன்வருவதில்லை. ஆனாலும் அவை என்னை ஆட்கொண்டு ஆளுமை செய்யவும் அனுமதிப்பதில்லை.

எப்போது இந்த வெறுமைகள் நேர்கிறதோ, அப்போதெல்லாம் இவை தங்களின் பலியாடான என்னை பார்த்து சிரிப்பதுதான், நான் படைக்கும் காதல் மொழிகளாகவும், கவிதைகளாகவும், ஓவியங்களாகவும் உருமாற்றம் பெற முடியம்.

சமயங்களில், இந்த கிரியா ஊக்கிகளின் இலாபங்களையும், இலாகிரிகளையும் வேண்டி வெறுமைகளை என்னில் நானே செயற்கையாய் ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்திருக்கிறேன். அம்முயற்சிகளில் பலமுறை நான் தோல்வியையே தழுவினேன் என்பதை வெளிபடுத்துவதில் வெட்கமில்லை.

காதலுக்காகவும், கவிதைக்காகவும் நான் முயன்றும் ஏற்படுத்திக்கொள்ளத் தவறிய வெறுமைகள், காதலையும் கவிதையையும், ஒவ்வொரு பிறப்பின் சாரமாகவுள்ள இயற்கையை பெருமைப்படுத்தினவேயன்றி யாரையும், குறிப்பாக என் சிந்தனையின் சாரத்தையும், வீர்யத்தையும் சிறுமைப்படுத்தவில்லை என்றே கருதுகிறேன்.

ஆனால், சிந்தனை வெறுமையை என் ஆளுமைக்குள் கொணர்ந்து, மாயைகளையும் விளைவுபிசாசுகளையும் பற்றிக் கவலையின்றி நான் சில சமயம் படைத்த பரிமாணங்களில், முத்தின் வனப்பும், வைரத்தின் வன்மையும், தங்கத்தின் தன்மையும் இல்லாமலில்லை.

என் போன்றோரைத் தவிர சிந்தனை வெறுமையை நுகர்வோர் என்று மதுவருந்தியவன் மற்றும் மனநிலை பிறழ்ந்தவன் என்று குறிக்கத் தோன்றுகிறது. அவர்களை போலவும் வெறுமையின் நிறைவை அதிகமாய் சுவைப்போர் யாரிருக்கிறார்கள்?

மாயையின் உந்துதலால், நான் சூழ்நிலை பரிகாரம் தேடப் புறப்பட்டு அடையும் இடம் கண்டிப்பாக, ஒவ்வொரு இவ்வகை நிகழ்வின் முடிவிலும், எனக்கு முன்பே பரிச்சயமானதாகத்தான் இருந்திருக்கின்றது.

சிறிது நேர சிந்தனை, மனதை வலுக்கட்டாயமாக மற்ற நேர்வுகளில் செலுத்துவது, நண்பனுடன் அளவளாவுதல் போன்ற காரியங்கள் இந்த முரட்டுக் குதிரைக்கு சவுக்குகளாய் இருப்பதை கண்டிருக்கிறேன். வெறுப்பல்ல அது, பெரிதும் இந்த முரட்டுக் குதிரையே என்னை படைப்பின் சிகரங்களுக்கு அழைத்து சென்றிருக்கிறது என்பதும், தன்மானச் சரிவுகளிலிருந்து காத்திருக்கிறது என்பதும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை.

- 17/03/87

ஒற்றைச் செருப்பு

நாற்சந்தியில்
நடுத்தெருவில்
நடைப்பாதையில்
எப்போதும் கிடக்கும்
ஒற்றைச் செருப்பு
எப்படித் தொலைந்தது
மற்றொன்று
எந்த நிர்ப்பந்தம்
பிரிக்குமவற்றை

கவனிப்பாரற்று
கிடந்துகொண்டேயிருக்கிறது
அடித்து புரட்டும்
அடைமழை வரும் வரை

போகும் ஊர் முழுதும்
பார்க்குமந்த
ஒற்றைச் செருப்பை
எண்ணப் புரியாத
ஏதோவொன்றின்
சீரழிவாய் எண்ணி
ஏங்கி விதிர்க்கும்
மனசு

- 16/05/92

Sunday, February 7, 2010

உள்ளோடும் நதி - 2

பல நாடுகளுக்கு சென்ற என் அனுபவங்களில், நதிகள் விரையும் பெருவெளிகளையும் பள்ளத்தாக்குகளையும் கண்டிருக்கிறேன். மானுடத்தை வாழ்விக்கும் நீராகவும், போக்குவரவு நடைபெறும் ஊடகமாகவும் நதிகளின் தேவை நின்றுவிடுவதின் எல்லை, மனிதன் வகுத்தது.

நதிகள், இயற்கையையும் இவ்வுலகையும், அண்டசராசரங்கள் தோன்றியநாள் முதல் இணைக்கும் தொப்புள்கொடிகளாய், தங்கள் கரைகளின் கருவெளிச் சூழலில் கோடானுகோடி உயிர்களையும், உன்னதமான நாகரிகங்களையும் படைத்து மனிதத்தின் ஆன்மீக தத்துவ தேடல்களின் விதைநிலமாக ஊற்றுக்கண்ணாக விளங்கும் தாயென இங்கு போற்றப்படுவது போல் வேறெங்கும் காணவில்லை.


மேற்கை போலல்லாமல் எனது நாட்டில் நதிகளுக்கும் மனிதத்துக்குமான உறவு, தாய்க்கும் சேய்களுக்கும் ஆன உறவென்றோ, தலைவன்-வழிபடுனர் என்றோ அல்லது இறைமை-பக்தன் என்றோ பாகுபடுத்த இயலாமல் ஒன்றுடன் ஒன்று முயங்கி, பல்வேறு வடிவங்களில் இயைந்து கிடக்கிறது. ஏனெனில், உயிர் தோன்றுவதிலிருந்து எரிந்து அடங்குவது வரை நதியோடு இணைந்தே வாழ்வுமுறை இயங்குகிறது.


மிக அழகிய ஒரு விஷுக் காலத்தில், ஒரு முறை நான் ஜகத்குரு ஆதிசங்கரர் அவதரித்த கேரளாவிலுள்ள காலடி என்றொரு சிற்றூருக்கு சென்றிருந்தேன். சென்ற களைப்பு தீர அங்காமலி என்னும் ஓரழகிய நகரில் இரவு தங்கி விட்டு, காலை இன்னும் கொஞ்சம் பயணக் களைப்பு மிச்சமிருக்க, சங்கரரின் கோவிலை அடைந்தேன்.

அது ஓரினிய புலர்காலைப் பொழுது. மிக மெல்லிய குளிர்ந்த தென்றல் வருடிச்செல்லும் அப்பொழுதில், பெரியாற்றின் கரையை அடைந்தேன். வேத மந்திரங்கள் எங்கோ தொலைவில் ஓதப்பட, இன்னும் விடியா அந்த குளிரில் என் முன் ஓசையில்லாமல் நகர்ந்துகொண்டிருந்த ஆனால் உறைந்து கிடப்பதுபோல் தோன்றின அந்நதியின் அழகும் அமைதியும் பிரம்மாண்டமும் என்னை உறைய வைத்தது.


தாய் தன் நெடுநாள் பிரிந்த மகன் வந்ததும் மார்போடு அணைத்து தழுவக் காத்திருப்பது போல் நதி ஆழம் அதிகமற்று அகண்ட பெருக்காய் காத்துக் கிடந்தது. கணிக்க முடியாததோர் கணத்தில் இவ்வுலகுடனான என் பந்தங்கள் அனைத்தும் அறுந்து விழுந்தன நானறியாமலே. என் கல்வி, என் கற்பிதம், என் செல்வம், என் குறைகள், என் நிறைகள்... ஒரு மகன், ஒரு கணவன், ஒரு தந்தை என என் உறவுகள் என் கண்முன் இல்லாமலானது. எதுவுமற்று நான் நின்றேன். என் திரைகள் விலகி, முகமூடி கழன்று நானும் நதியும் மட்டும் அங்கிருந்தோம்.


என்ன மனிதம் நமது, என்ன இருப்பு எமது!


வானம் மிக மெதுவாக நிறம் மாறி கொண்டிருக்க, நதியின் முன் பரிபூரண நிர்மலமான நிர்வாணம் நிறைக்க நின்றது போல் நின்றேன். கரையில் நான் மட்டும் இருந்தேன், அல்லது அவ்வாறு உணர்ந்தேன். என்னை அனைத்து புலன்களிலிருந்தும் விடுபட செய்த, என்னையும் அந்நதியையும் படைத்தோனை, எல்லாம் வல்லவனை இன்றும் தொழுகிறேன்.

நதியின் மெல்லிய மேற்பரப்பு பொன்னிறமாக மாறுவதை, குவிந்த கரங்களுடனும் தொழுத மனதுடனும் எத்துணை பொழுது பார்த்தவாறு நின்றிருந்தேன்... அவள் தன் மேனிமூடிய சருகன்ன துகிலை சிற்சிறு பொன்னிற இழைகளால் அலங்கரித்து கொண்டிருந்தாள். அலைகளின் மேல் அலைகளை என் பாதம் படச் செயதவாரிருந்தாள்.

அலைப்பரப்பின் மேல்போலல்லாது உட்புறம் வெதுவெதுப்பாக இருப்பதை உள்ளிறங்கியதும் உணர்ந்தேன். ஆயிரம் ஆச்சர்யங்களை தன்னுள் ஒளித்துக் கொண்டு மகன் வந்ததும் பல்லாயிரம் கைகளால் வாரியணைத்து அன்பும் வெம்மையும் சேர்ந்து விம்மும் மார்போடு இறுக்கி, விளையாட்டுக் காட்டும் என் தாய்.

என் காலடியில் அசையாக் குறுமணல். இடையளவு நிதானமாக ஓடுகின்ற நதிக்குள் கால்கள் மடக்கி சப்பணமிட்டு அமர்ந்ததும், நீர் என் நெஞ்சை உயர்ந்து நாசியின் கீழ் நகர்ந்தது. என் இறைவனை தொழவெழுந்த எண்ணம் பொருளற்றது என உடனே உணர்ந்தேன்.

சிந்தை ஒரு கணம் எதுவுமற்று நிர்ச்சலனமாகி நிலைத்தது; சூன்யம், எண்ணமெதுவுமற்ற சூன்யப் பரவெளி.

எத்தனை கோடிக் காலம் அப்படி அமர்ந்திருந்தேன். எத்தனையோ கோடானு கோடிக்காலம் புவி நனைத்து, உயிர் நனைத்து அழியா இளமையுடனும் பேராற்றலுடனும் ஓடிக்கொண்டிருப்பவள் என்னுள்ளும் தன் அன்பின், காதலின், கருணையின் பல்லாயிரம் வடிவங்கள் சூழ அமிழ்த்தி, எனக்கும் அழியா வல்லமையும் பொலிவும் தந்தாள். அவளுடன் ஒன்றென நானற்று ஒன்றாகி. அவ்வொரு இணைவை கண் திறந்து கலைக்க துணிவற்று மனமற்று எத்தனையோ கோடிக்காலம் அமர்ந்திருந்தேன். எங்கே கண் விழித்தால் அவளிலிருந்து விலகுவதாய், அவளின் இணையற்ற நேசத்தை பொருட்படுத்தாததாய், உலகை விரும்பிப் பிரிவதாய் எண்ணி விடுவாளோ, எண்ணி மருகி விடுவாளோ என்று அஞ்சிக் அப்படியே கிடந்தேன்...


காலமும் நதியும் என்னிலும் என்னைச் சுற்றியும் மிதந்தன.


என்னைச் சுற்றி அவள் பின்னியிருந்த மோனத்தவத்திலிருந்து விழித்தேன்; மெல்லக் கரையேறினேன் அவளுடலின் சூட்டை என்னில் உணர்ந்தவாறே. மேலேழுந்துவிட்ட ஆதவனின் கதிரொளியில் நதியின் அடங்காப் பேரழகும் விரிந்த வடிவமும் துலங்கின.

தோன்றிய நாள்முதல் படைத்தும் காத்தும் அணைத்துக் கிடந்தவளுக்கு, எதுவுமே விட்டுச்செல்லாமல் மறையப் போகும் ஒரு மானிட அணுவினும் சிறியேனையும், அன்பின்பால் பொருட்டாய் சேர்த்தாய் என நன்றியுடன், என் குறைகளுடன் ஏற்று, அமைதி சூழச் செய்து, விலகும்போது ஒரு வார்த்தையேனும் புகலாமல், செல்ல அனுமதித்தாயே என நெகிழ்வுடன் கரையேறினேன்.


அவள் மெளனமாக பார்த்து நிற்க, நான் கரை விலகினேன், வேதங்கள் தொலைவில் தெளிவாக கேட்க.
 
(A translation of my previous post 'The River Within')

சூடிக்கொண்டலையும்

தட்டுத் தடவி நிற்றல்
தள்ளாடி தான் நடை
காத்திருந்தே நிறையும் வயிறு
உடற்சுத்தமோ உதவியோடே
வந்துதித்த நாள்முதல்
சூடிக்கொண்டலையும்
எதிர்பார்ப்புகளினாலும்
ஏமாற்றங்களினாலும்
அருளப்பட்ட
இந்த இடைதூரத்தை
கடக்கும் வழி
உரைக்கக் காத்திருக்கிறாய்
கடந்தும்
வந்துதித்த உன்னிலைபோலும்
இந்நிலைமாறா
என்னால்
எப்படி ஏலும் என

Monday, February 1, 2010

உள்ளோடும் நதி 1

இரு கைகளின்
ஆட்காட்டி விரல்கள் சேர்ந்து
இடதிலிருந்து வலதும்
வலதிலிருந்து இடதும்
அலைந்து அலைந்து
மேலும் கீழும்
மிதந்து பறக்கும்
கால்களுக்குப் பதில் சிறகுகள்
மரப்பலகைச் சட்டம்
ஒருபுறம் கழன்றாடும்
கன்னங்கரிய (பள்ளியின்
வேலி படர்ந்த
கோவை இலை பறித்து
தேய்த்த)
சிலேட்டில் வாங்கிய
மதிப்பெண்
மொட்டைமாடியின் காய்கின்ற
சித்திரை வெயிலில்
தண்ணீர்தொட்டியின்
அடியில்
விரித்துப் படுத்து
ஓயாது பேசுகின்ற
பள்ளிக் கதைகளில்
அவ்வப்போது
அச்சத்துடன் அக்கம்பக்கம்
பார்த்துப் பேசும்
பாலியல் கதைகள்
முதன்முதல் வாங்கிய
வாகனமேறிய
நண்பனுடன் காடுமேடு சுற்றி
வழக்கமாய்
புகைப்படம் எடுத்தலையும்
இயற்கையும் செயற்கையும்
தாண்டி
எங்கோ ஒரு ஊரில்
ஏதோ ஒரு கடையில்
அடைக்கப் போகும் பொழுதில்
அருந்தும் பேச்சில்
பசியற்ற உணவு
உலகின் கற்பனை அனைத்தும்
தத்துவம் அனைத்தும்
பேசித் தீர்த்துவிட
இருண்டு குளிர்ந்த
சாலைப்படியோரம்
புகைத்துத் தீர்ந்த
எண்ணங்களை எண்ணி
முடிப்பதற்குமுன்
சந்தேகத்தின்பேரில்
முதன்முதல்
அழைத்து செல்லப்பட்ட
(அப்பாவுக்கு இன்னும் தெரியாத)
காவல் நிலையம்
நூலக வாசலில்
பார்வை செல்லாத
புத்தக விரிப்பின் ஊடே
எனக்கு பிடிக்கும் என்று
பச்சைசேலை அணிந்து
கௌரவமும்
கர்வமும்
தந்த முதல் தோழி
ஆளரவமற்ற கிராமத்தின்
ஆளரவமற்ற கோயிலில்
இயலாமையில்
மனம் வெந்த
கண்ணீர் கறைகளின்
சாட்சியாய் நின்ற
முருகன்
ஒன்றுக்குள் ஒன்று
உருமாறிக்கொள்ளும்
நிகழ்வுகளின்
தொடர்வாய் வாழ்க்கை
நல்லவேளை
பிறப்பைப்போல
இறப்பும் ஒன்று

Sunday, January 24, 2010

"காமக் கனலிற் கருகுஞ் சருகு"

பட்டினத்தார் அருளிய திருப்பாடல் திரட்டு
15 பாடல்களின் மொழியாக்கம்
 
கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
கொட்டிமுழக்கி யழுவார்; மயானங் குறுகியப்பால்
எட்டி யடிவைப்ப ரோ? யிறைவா ! கச்சியேகம்பனே.

Will these women and children
Who embrace and shower their love,
Who cry with such passion
As time closes in on,
When this body
Lays as a dead tree would,
Go along
Beyond the final ground?

நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ? அகமும், பொருளும்
இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சியேகம்பனே !

Which is wise -
Other than being with the righteous,
Pray and love thee
And continue the quest for wisdom?
All that acquired -
Self, wealth, wife and relatives
Children, life and this beautiful body –
Are not they mere illusions!

பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே !

Why was I born -
Leading unrighteous life,
Uncontrolled and illiterate
Not being with learned
A liar and
Who had not
Surrendered his love at thy feet

பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே !

How would I muse
For those
Who guard their wealth
Not sharing and unrealizing
That what had been given unto them
Was only given by thee
And was not with them when born
And surely will not leave as they die

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.

Forgive me
For being an illiterate to thy scriptures
For being mindless not realizing thy love
For being impassionate unmoved by thy love
For not being righteous and not living in path leading unto you
And for not praying and worshipping thee

ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே.

Transient are
This world and goodwill;
Relatives and women;
Children and glories earned;
Wealth and all those
Who are in this world;
It is thy feet,
Which is my permanent abode!

சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனையால் வருந்தோடஞ்செய்த
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியைக் கேட்டிடுந் தீங்குகள் ஆயவுமற்று
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சியேகம்பனே,

Forgive me my sins
The unkind words I utter
Deeds I commit from sinned thoughts
Sinning even with my vision
Paying heed and holding to
Unrighteous words

பிறந்துமண்மீதிற் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை
மறந்து சிற்றின்பத்தின் மேல்மயலாகிப் புன்மாதருக்குள்
பறந்துழன்றே தடுமாறிப்பொன் தேடியப் பாவையர்க்கீந்து
இறந்திடவோ பணித்தாய் இறைவா, கச்சியேகம்பனே.

What have you destined me for -
Is it to be born into this world
Suffer with countless debilitations
To forget thee and
Fall at the feet of women
Toil tirelessly earning
Wealth to be given unto them
And die an unrepenting death?

கொன்றேன் அனேகமுயிரை எலாம்பின்பு கொன்றுகொன்று
தின்றே அதன்றியும் தீங்குசெய்தேன் அதுதீர்கவென்றே
நின்றேன் நின்சன்னிதிக்கே அதனால் குற்றம்நீபொறுப்பாய்
என்றே யுனைநம்பினேன் இறைவா, கச்சியேகம்பனே.

I stand thus at your sanctum
Praying thy pardon
I have killed, and killed a many
Ate what I killed
Committed sins which are countless
All that had ceased
As I bow at your lotus feet

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே?

How many mothers have I had?
How many fathers could I have had?
Countless women I might have had
Countless children did I father
How may births I have had in the past
As a foolish dog, I never, never would know
How many births I am to have henceforth
What will I do, oh my Lord!

கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங்கோள்கள்
கல்லாமற் கைதவரோ டிணங்காமற் கனவினும்பொய்
சொல்லாமற் சொற்களைக் கேளாமற் றோகையர்மாயையிலே
செல்லாமற் செல்வந் தருவாய், சிதம்பர தேசிகனே.

Bless me the wealth, the wealth of knowledge
Which guides me not to kill
Not to eat what has been killed
Not to learn what not to be learnt
Not to be with sinners
Not to lie ever
To be of my own
And not to fall prey in lust

முடிசார்ந்த மன்னரு மற்றமுள்ளோரு முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதுங் கண்டுபின்னுமிந்தப்
பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னினம்பலவ
ரடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றே யறிவாரில்லையே.

When would it dawn on them,
For those having witnessed
The countless who had ruled the earth
And all who have lived before us
All ending in handful of ashes,
That they should disavow materialistic life
And hold thy golden feet
To end this cycle of births and deaths

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்; 10

Whatever had born, will die; whichever had died, will be born
Whatever had appeared will vanish; whatever had vanished will appear
Whatever had grown, will diminish; whatever had diminished will bloom
Whatever had been felt will be forgotten; whatever had been forgotten will be remembered
Whatever had united will separate; whatever had been divided will be conjoined

அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை யனைத்து முணர்ந்தனை, அன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்
கொன்றனை யனைத்தும், அனைத்துநினைக் கொன்றன,

What had been eaten were all wastes;
What had been worn were all soiled;
What had been liked was disliked, what had been hated was loved
All were realized by all those born
Born through innumerous births
All annihilated by thee
And all killing thee

தின்றன யனைத்தும், அனைத்துநினைத் தின்றன;
பெற்றன யனைத்தும், அனைத்துநினைப் பெற்றன;
ஓம்பினை யனைத்தும், அனைத்துநினை யோம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத் தழுகினை;
சுவர்க்கத் திருந்தினை, நரகிற் கிடந்தனை,

All were eaten and all ate thee
All were born unto thee, all gave birth to thee
All were fed by thee and all fed thee
Lavished at wealth, toiled in penury
Relished at heaven and suffered in hell!

- திருப்பாடல் திரட்டு - பட்டினத்தார் அருளியது

Sunday, July 26, 2009

Aadum Koothu

"Annai! Annai! Aadum Koothai
Naada cheidhaai ennai!"

These were the lines by Mahakavi Bharathi in his poem titled 'Oozhi koothu' (the doomsday dance).

Yesterday, I saw a Tamil movie 'Aadum Koothu' directed by the notable Malayalam film director, script writer and actor, T.V. Chandran. The film had won Silver Lotus Award (Indian National Film Award) for best Tamil feature film in 2006. Cheran and Navya Nair had played the lead roles.

The film describes how a simple, flowing life of a village girl gets disturbed by sudden hallucinations leading to her finding the truth behind a social discrimination to a low caste girl decades ago. She unearths even an unfinished film attempting to portray the injustice, completes it and settles after feeling peace in the fact that she had brought to light what had been pending for so many years.

Except for Navya's absolute performance and few flashy scenes for Cheran, the movie is not of a very special theme.

But what had struck me was the theme and title, 'Aadum Koothu'. These two words resonated through my mind and through the movie, I kept pronouncing them almost mesmerized. The Tamil phrase literally means, 'the dances we perform'. But when I translate ‘Aadum Koothu’, my heart sinks to find that it does not convey even a reasonable measure of how profound it sounds in Tamil!

Koothu – this Tamil word equates to dance, a play, performance, stage act, music and most subtly or most explicitly, a playful, captivating musical performance. Bharathi in his Oozhi Koothu, (remember he is a Saaktha, meaning a Kaali worshipper), praises the deity Kaali, Her playful dance and describes at great detail how She performs the koothu. In Hindu scriptures, especially Saivism, the world is said to have been created and annihilated both by the dance or ‘Koothu’ by the Supreme being, Shiva.

Bharathi punctuates his poem, of 5 verses of 6 lines each, by ending every verse with these two lines:

“Annai! Annai! Aadum koothai
Naada Cheidhaai Ennai”

- meaning, ‘Oh, Mother! You made me desire this playful performance!’

When read with the remaining first four lines, these two lines make remarkable intones of how Bharathi would have felt then - as a great genius and poet ever struggling in penury but torn between his own worldly incompetences and his fight against colonial rule.

In the second verse of the poem he refers to the Koothidum Kaali (dancing Kaali),

“There,
Countless demons prance and unite to be one – they
All blend and submerge into Thy nature as one!
Where Thee dance endless at the speed of light
Captivating minds, showering fire as Thy dance!
Oh, Mother! You made me desire
This playful performance!”

And in the fifth and final verse, Kaali’s Koothu annihilates the universe, everything destroyed (Oozhi), nothing more survives – only Shiva’s presence remains. His silent penance brings Kaali to Her being.

“Time and Universe cease to exist – Only
Light from His penance persists – You
Leave Your fury in His presence – And
Touch Him gleefully and dance, a playful one!
Oh, Mother! You made me desire
This playful performance!”


The profundity of the last two lines increases folds when you read them in conjunction with the other four lines of these verses.

Bharathi desires Kaali’s all-destroying dance to be natural desire for him in his worldly life, as he positions himself through his many manifestations, as a fighter against evil, slavery and denigration.

The same poet, as romanticized as he is, who had sought wealth, health, fame and knowledge as his prayers, accepts Kaali’s loving stance in the end – Oozhi Koothu culminating in a romantic, gleeful dance, also to be his desire!
Both these stances, he is humble in accepting, has to be given unto him by Kaali, as he says, 'Naada Cheidhaai', meaning - 'Thee made me desire so'!

I feel my inadequacy at grasping what Bharathi would have meant by desiring “Aadum Koothu” at different contexts of his poem…

ஆடும் கூத்து


"அன்னை அன்னை ஆடும் கூத்தை
நாடச் செய்தாய் என்னை..."

ஆடும் கூத்திது ஆடிக் களிப்போம்
எங்கே பிறந்த பாவம் தாளம்
மனிதம் தேடும் கூத்தின் சாரம்
திரிபுர சடையன் ஆடிய கூத்தின்
எஞ்சிய எச்சம் இன்னும் தொடரும்
உற்றது பிரிந்தும் உள்ளது தொடரும்
ஆடும் கூத்தை நாடி ஆடும்

அற்றது கண்முன் கண்டும் உணரா
கற்றது கேட்டது எதுவும் உதவா
முதலும் முடிவும் ஆடும் கூத்தே
உனதும் எனதும் அதுவே அதுவே
அணுவில் துளியில் ஒளியில் மழையில்
புலனில் புவியில் அறிவில் இசையில்
எதிலும் எதிலும் ஆடும் கூத்தே

ஆடி அடங்கி மறைந்து ஒடுங்கி
உருவம் களைந்து அருவம் அடையும்
உயிரும் விட்டுப் போகும் இன்னொரு
உடலின் வித்தாய் ஆடும் கூத்து
சுடரில் துடிக்கும் நரம்பில் இசைக்கும்
ஒளியின் இசையும் இசையின் ஒலியும்
அறிந்தால் அறிவோம் இன்றேல் மறவோம்
சிவமே பரமே ஆடும் கூத்தே

Saturday, February 14, 2009

என் தெய்வம்

அச்சம் இல்லை
துன்பம் இல்லை
கண்ணீர் இல்லை
கவலை இல்லை.
தெய்வம் துணை.
வேல் உண்டு பயமில்லை
வேல் உண்டு பயமில்லை
தெய்வம் உண்டு தனி இல்லை

மன வலிமை தரும்
தோள் வலிவும் தரும்
நல்லறிவு தரும்
நாளும் வேண்டுவன
தெய்வம் தரும்
முந்தி வரச் செய்யும்
வினை திட்பம் தரும்
வேல் உண்டு பயமில்லை
தெய்வம் உண்டு தனி இல்லை

Pandit Venkatesh Kumar and Raag Hameer