Monday, February 20, 2017

இயற்கையின் கவிதை

haiku1
அவ்வப்போது
நிலவின் ரசிகர்களுக்கு
ஓய்வளிக்கும் முகில்கள்
– மட்சுவோ பாஷோ
haiku2
மேற்கின் காற்றில் எறியுண்டு
கிழக்கில் சேர்கின்றன
உதிர்ந்த இலைகள்
– யோசா புஸோன்
haiku3
என் வாழ்வு –
இன்னும் எவ்வளவு மீதம்?
இது குறுகிய இரவு
– மசஓகா ஷிகி
haiku4
குளிர்காலக் காடெங்கும்
உதிர்ப்பதற்கு இலைகளின்றி
கடுஞ்சினத்துடன் ஓலமிடும் காற்று
– நட்சுமே சோசெகி
haiku5
இந்தப் பாதையில்
யாரும் பயணிப்பதில்லை என்னைத் தவிர,
இந்த இலையுதிர்கால மாலையில்
– மட்சுவோ பாஷோ
haiku6
இலையுதிர்காலத்தின் முதற்காலை
நான் பார்க்கும் கண்ணாடி
என் தந்தையின் முகத்தைக் காட்டுகிறது
– முரகாமி கிஜோ
haiku7
விளக்கு அணைந்ததும்
சன்னல் சட்டகத்தினுள்
நுழைகின்றன குளிர் விண்மீன்கள்
– நட்சுமே சோசெகி

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer