Wednesday, December 13, 2017

ஆதி கதை

Image result for animals gods humans

கதை சொல்லத் தொடங்குகிறேன்

இன்று போலல்ல
அது தேவதைகளும் யக்ஷிகளும்
மிருகங்களும் மனிதர்களும்
தத்தமது உலகம் வாழ்ந்த காலம்

கூடியும் ஊடியும்
களியென யக்ஷிகள்
ஒருநாள் மனிதத்தடம் பதிந்திராத
கருமலைகளின் விண்பொதிந்த
உயரங்களினின்று
மண்வந்து சேர்ந்தன

சிகரங்களின் பனிமுகில்கள்
கொடுமுடிகள் விட்டிறங்கி
கானகத்தின் இலைப்படுகை
கால்நுனி தீண்டிப்பார்க்கும்
அந்நீர்தொடர்ந்து ஆடிவந்த
தேவதைகளும் யக்ஷிகளும்
பிறிதொரு கரைநின்ற
விலங்குகளும் மனிதமும்
கண்டுகொண்டன

அதன்பின் கடந்துமறைந்த
காலங்கள்தோறும்
யாருக்கு பூசனை யாரிடும் படையல்
யாருக்கு ப்ரீதி யார் செய்வதென
கனவுகளிலும் தீரா போர்களில்
கழிந்தன தலைமுறைகள்

ஒருபோது மனிதம் வேண்டி
யக்ஷிகள் தெண்டனிடும்
மறுபோதோ
படையலும் பலியும் கொள்ளுமவை

எழுந்தும் அமிழ்ந்தும்
அவை சன்னதம்
அடங்காதாடும்தோறும்
அவற்றிலொன்றென ஆயினும்
இதுவேதும் கலவா தேவதைகளோ
கூர்பார்வையும் அரிதென சிரியுமென
பனிமூடிச்சிகரங்கள் ஏறியவாறிருந்தன

போர்களில்
படைப்பும் காதலும் ஊக்கமும்
அழிந்துகிடந்த
யக்ஷிகள் மனிதர்கள்முன்
தோன்றின தேவதைகள் ஒருநாள்
யாரும் கேட்டிரா ஒலிகளில் உன்னதம்நிறைத்து
யாரும் கண்டிரா வினைகளில் மர்மம்புதைத்து
தேவதைகள் கூறும்
வேடம் மாற்றுக
முகமூடி களைக
யக்ஷியும் நீ மானுடமும் நீவிர்
விலங்கினமும் நாம்
அனைத்தும் நாமே
வீழ்ந்தன அனைத்தும்
பணிந்தன பாதம்

கதைமுடிந்தது
எனினும்
கனவுமுடியாதென
நாமும் அறிவோம்
அவையும் அறியும்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: ஆதி கதை

https://padhaakai.com/2017/12/10/the-foundational-myth/


Monday, November 13, 2017

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: நீட்சி

https://padhaakai.com/2017/11/10/in-extenso/

நீட்சி

செயலின்மையின் செய்நேர்த்தி
உச்சம்கொண்ட
ஒரு காலம் கடந்தோம்
மனிதத்திரளின் அத்தனை உன்னதமும்
உறைந்து கிடந்ததோர்
காலமும் கடந்தோம்
விடிவதும் கதிர் முடிவதும்
இடையே
எழுவதும் விழுவதும்
உண்பதும் கழிப்பதுமான
தொடர்நியதிகளின் சூழ்வே
வாழ்வென விதித்துக்
கிடந்ததொரு காலமும் கடந்தோம்
ஒரு குரலில்லை அழுகையில்லை
அழுந்திக் கிடக்குமோர் உணர்வுமில்லை
செய்தே அறியமுடியுமெனின்
யாதும் செய்யாதிருத்தல்
யார் நலன் பொருட்டு
என்றும் வினவாதிருந்தோம்
இன்றோ
தவறெனப்படும் பாதைகளிலும் பயணம்
குறையொளியெனினும் திரியேறும் சிறுதீபம்
இயைந்தெழும்
இயக்கத்தின் வெளிப்பாடு
காண்கிறோம்
ஆயினும் கேட்கிறோம்
இன்னும் புதிதாய் சில குரல்கள்
இத்தனைக் காலம்
உறங்கிக் கிடந்த குரல்கள்
பாதையின் வளைவை இடரை
ஒளியின் போதாமையை
சுட்டும் குரல்கள்
அவலம் சிறிதும் தொனிக்கா
கயமைக் குரல்கள்
வேண்டுவது ஒன்றே
இயக்கமின்றி
இம்மானுடத்திரள் தேங்கியழிதல்
முன்னகர்வில்லை
இயங்காதிருப்பின்
இயக்கம் போற்றுதும்
இயக்கம் போற்றுதும்
இன்மை களையும்
இயக்கம் போற்றுதும்

Wednesday, October 4, 2017

வேட்கை

Image result for bird drinking water + busy road

பசுமஞ்சள் அலகைச் சாய்த்துச் சாய்த்து
கையகல நீர்த்தேக்கத்தை
துளித்துளியாய் அருந்துகிறாய்
அடுத்தப் பேருந்து வந்து
நீர்த்தேக்கத்தை சிதறடிக்குமுன்
உன்சிறு நாவின் வேட்கை
தணியுமோ ஆறாதோ
தவித்தவாறு நடைமேடையில் நிற்கும்
என்னருகே தாவி நின்று
வந்த பேருந்து கிளம்பக் காத்திருக்கிறோம்
நீயும் நானும்

Padhaakai - Kavithai

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

https://padhaakai.com/2017/10/04/desire/

Monday, July 31, 2017

இக்கவிதை

வானின்று பொழியும் நீர்ச்சரங்களில்
மழை வில்லை மண் இறக்கிவிடும்
பிரயத்தனங்களின் கனமில்லாத கவிதை

பதிந்து சென்ற தடங்களின் அழுத்தமும்
புதுப்பாதை சமைக்க நேரும்
நிர்பந்தங்களின் எடையுமற்ற கவிதை

தன் சிறகின் இளைப்பு தவிர
எதன்பொருட்டும்
தோள்தர நேர்ந்துவிடும் கட்டுப்பாடற்ற கவிதை

எளிதில் உருவழிந்துபோகும்
எதிலும் குறிக்கப்பெறா
இந்தக்கணம் போலும்
இக்கணம் வாழும்
இக்கவிதை

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை

https://padhaakai.com/2017/07/23/this-poem/


Tuesday, July 11, 2017

பால்மயக்கம்

Image result for sukhumvit street bars

இறுக்கம்கூடிய
திரைகளையும் திறந்துவிடும்
நுட்பமறிந்தோர் மட்டுமே
நிறைந்ததோர் உலகம்
வண்ணம் வழியும் வீதியின்
இருமருங்கும் இடப்பட்டிருக்கும்
உணவு மேசைகளினின்று
ஏந்த யாருமின்றி
சிந்துகின்றன சுவைமிகுந்த மதுக்கள்
அங்கே நடனமாடுவதுபோல் நடிப்பதற்கும்
நடப்பதுபோல் கிடப்பதற்கும்
ஊக்கம் தரும் மிகச் சிறந்த லாகிரிகள்
அவை மட்டுமல்ல
நடைபாதையின் மேலேறி
உதட்டினருகே குவளையைக்
கொணர்கிறாள்
மிக மிக சிவந்த இதழ்ச்சாயம்வழி
ஒன்றையே குறிப்புணர்த்தும்
வியட்நாமிய இளம்பெண்
பர்மிய இசைபொழியும்
மதுக்கடையின் அடுத்து
தாய் உணவகம்
இசை என்று பிரித்தறிய முடியா ஒலிகள்
இன்ன நிறம் என்று பகுத்தறிவியலா ஒளிகள்
இவ்வினம் இது
இச்சுவை அது
எதுவும் கூடும்
விரித்துக் கிடக்குமிந்த பாங்காக் நகரத்து
சுகும்வித் வீதியில்
ஆணோவென்னும் பெண்ணும்
பெண்ணோ எனும் ஆணும்
ஏன் உணர வேண்டும்
இதுவென்ன மயக்கமென

பதாகை மின்னிதழில் கவிதை

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

https://padhaakai.com/2017/07/09/sukhumvit-street/

Monday, June 26, 2017

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் - நில்லா கணத்தின் கவிதை

https://padhaakai.com/2017/06/25/poetry-of-the-transcient/

நிலையா கணத்தின் கவிதை​

இன்றிரவு மிகச்சரியாக
ஒரு நொடிப்பொழுதில்
இரையிட்டு நெய்சேர்த்து
அணிசேர்த்து ஊன்வளர்த்த
இளமை
முன்வாசல் வழியாக
கடந்து மறையும்
என்பது எப்படித் தெரிந்தது

பிறந்தது முதல் இக்கணம் வரை
ஏற்றிக் கனத்த அனுபவப்பொதிகளில்
கிழிந்தொழுகியது போலும்
நுண்ணுணர்வு

நோயில் புரள்பவனின் சத்தமற்ற வாதை
தொடநீளும் விரல்களின் உதாசீனங்கள்
நிறைந்திருக்கும் இந்த இரவில்
இதுபோன்று யுகங்கள்தோறும்
இளமைகள் கரைந்து வந்திருக்கின்றன
புதிதொன்றுமில்லை

கரைந்துகூடி வரும் முகிற்கருமையின் முன்னே
வாயிலை வெளிச்சப்படுத்தி
விளக்கொன்றும் ஏற்றுவதற்கில்லை
காத்திருப்பவனின் அனுபவம் என்றுமே சிறந்தது

நிலைச்சட்டத்திற்குள் நிலையாது
அசையும் திரைச்சீலையில்
அகப்படாதலையும் வண்ணக்குலைவு

இத்தனை பெரிய அறை
எத்தனையோ சன்னல்கள்
இருப்பினும்
வலமிருந்து குதித்து இடம் செல்கிறது
தொலைவில் பதிந்திருக்கும்
மின்னும் கண்களுடன்
கரிந்து கவிந்துவரும்
இருளின் நிறம்தோய்ந்த கரும்பூனை

எனைத் தவிர எதுவும்
உடைந்துவிடக்கூடாதென்பதில்
உறுதியாகவிருக்கிறேன்
வாடித்தலைக்கவிழ்ந்த பூச்சருகுகளை
மென்மையாக வருடும் இந்த இரவின்
கூதற்காற்றை என்ன சொல்வது

விளக்கின்றி என் வெம்மை மட்டுமே
துணையிருக்கும் இந்த அறையில்
கனத்த சத்தமெழுப்பாத மெத்தையில்
கால்கள் மடித்துக் காத்திருக்கிறேன்
குளிர்காற்று மெதுவே நகரும்
முன்வாசலை நோக்கியபடி

எனக்கு மிகுந்த நேரமில்லை
புலர்வதற்குள் பார்த்துவிடவேண்டும்
கடக்கும் கணத்தை ​

Monday, May 22, 2017

Unna Nenachen Pattu Padichen - Aboorva Sagotharargal

Mouname Paarvaiyaal Oru Paattu Paada Vendum

Kalyana Maalai - Pudhu Pudhu Arthangal

Amma Endrazhaikkatha - Mannan

Idhayam Oru Kovil - Idhaya Kovil

Paruvame Puthiya Paadal - Nenjathai Killaathe

AMMA AZHAGE - Kaadhal Oviyam

Enna idhu enna idhu - Nala damayanthi

https://www.smule.com/p/885747961_1270401964


Thooliyile aada vantha தூளியிலே ஆட வந்த - Chinna Thambi

Naan Pogiren mele mele - Naanayam

Roja Ondru Mutham - Komberimookan

Ilaiya Nila Pozhigiradhu

Madhanorchavam - Sadhurangam

ஜகார்த்தாவின் மாஸ்யூஸ்

நறுமணத் தேநீரும்
ஜாவாவின் மெல்லிய தந்தியிசையும்
கமழும் வரவேற்பறை
உட்சென்று உடைமாற்றி
உடலைத் தளர்த்தி நீட்டிப் படுத்தால்
உள்வருகிறாள் இளம் பெண்ணொருத்தி
அழுத்தி இழுத்து
தடவி நீவி
மிதித்து முறுக்கி
ஒரு மணி நேரமும்
இரு மெல்லிய தோள்கள்
இரு மெல்லிய கரங்கள்
மிக மெல்லிய விரல்கள்
சின்னஞ்சிறு உருவம்
புன்னகைமாறா இயக்கம்
அசதி களைந்து
உறக்கம் மேவ
வெளிக்கிளம்புகையில்
கடிகாரத்தை ஏறிட்டபடி
கைகள் நீட்டி
சோம்பல் முறிக்கிறாள்
என் உடல்வலி
தான் மாற்றிக்கொண்டு
அடுத்த வாடிக்கையாளரை
எதிர்நோக்கும்
ஜகார்த்தாவின் மாஸ்யூஸ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: ஜகார்த்தாவின் மாஸ்யூஸ்

https://padhaakai.com/2017/05/21/the-masseuse-of-jakarta/

Monday, May 1, 2017

Nilave Ennidam Nerungathe - Raamu

Uravugal Thodarkadhai- Aval appadithan

Samsaram Enbathu Veenai - Mayangugiraal oru Maadhu

Thindaduthey rendu kiliye - Aanandha Kummi

Nilave Vaa - Mouna Raagam

Yaar Veetil Roja - Idhaya Kovil

Pournami Nilavil Pani Vizhum Iravil - Kanni Penn

RAJA ENBAAR MANDHIRI ENBAAR - Bhuvana Oru Kelvikkuri

Vasantha Kaala Nadhigalile - Moondru Mudichu

Oru kunguma chengamallam

THEN SINTHUTHEY VANAM - Ponnukku Thanga Manasu

Poonthalir Aada - Paneer Pushpangal

Kadhal Rajiyam Enathu - Mannavan Vanthaanadi

Potri Paadadi Ponne - Devar Magan

yen pen endru - Love Today

Vaa Vaa Anbe Anbe - Agni Natshathiram

Anbu Megame Ingu-Engamma Maharani

Oru Thedhi Paarthal - Coimbatore Mappillai

Thoongaatha kan ondru - Kungumam

Un paarvaiyil oorayiram - Amman Kovil Kizhakkaale

Bharathi Kannamma - Ninaithaaley Inikkum

Thaana Vandha Santhaname

Uchi Vaguntheduthu - Rosappoo Ravikaikari

Aattukutti Muttai - 16 Vayathinile

varuthu varuthu ilangatru - Bramma

Saama Kozhi Koovudhama - Ponnu Ooruku pudhusu

Raathiriyil poothirukkum - Thanga Magan

Enga ooru kaadhala paththi

Malare Kurinji Malare - Dr Siva

nilavu vandhadhu nilavu vandhadhu jannal

Poo vasam - Anbe Sivam

Vellai pookal ulagam engum - Kannathil Muthamittaal

naan oru ponnoviyam kanden - Kannil Theriyum Kathaigal

Elangaathu Veesudhey - Pithamagan

Aagaya Gangai - Dharma Yutham

Paruvame Puthiya Paadal - Nenjathai Killaathe

Kannil yetho minnal - Poo Vilangu

Poomaalaye Thol Serava -- Pagal Nilavu

Kannale Kaadhal Kavithai -- Aathma

Iravoom nilavoom Valaratumey - Karnan

Kungumam Manjalukku -- Enga Mudalali

Thalayai Kuniyum Thamaraye -- Oru Odai Nadhiyaagirathu

Sangeedha swarangal - Azhagan

Muthal Murai Killi Parthen- Sangamam

Ulagam azhagu kalaigalin - Ulagam sutrum vaaliban

Uravenum Pudhiya Vaanil - Azhiyaatha Kolangal

Malligaiye malligaiye thoodhaga po

En mana vaanil - kaasi

Oru raagam padalodu - Aanandha Raagam

Kaadu thiranthu_Vasool Raja MBBS

Malaiyora Mayile - Oruvar Vaazhum Aalayam

Harivarasanam

Poovadei Kaatru - Gopurangal Saaivathillai

Nee Oru Kaathal Sangeetham -- Nayagan

Nallam Vazha Ennalum - Marupadiyum

Sollathey Solla Sollathey

Moolai thirugum - Kanaa kanden

Naan enbathu nee allavo - Soora Samhaaram

Metti Oli Kaatrodu - Metti

Paattu Thalaivan - Idhaya Koil

Etho Ninaivugal Kanavugal - Agal Vilakku

Naan Erikarai melirunthu - Chinna Thaayi

Naan Pogiren mele mele

Thendral Vanthu Theendum - Avatharam

Sippi Irukkuthu - Varumayin Niram Sivappu

Poongathave -- Nizhalgal

Poo vasam - Anbe Sivam

Rum bum bum aarambam

Kangal Irandaal - Subramaniapuram

Monday, April 24, 2017

புலன்மயக்கம்

Image result for separation lovers

இமைத்துவிட்டாலும் கசங்கிப் போகக்கூடும்
விழிகளுக்குள் தேங்கி நிற்கும் உறவு
கூப்பிய கரங்களின் விரல்நுனிகள்
பார்த்தவாறிருந்தேன்
சொல்லென இல்லாமலேனும்
உணர்வொன்று
விரல்வழி வழிந்துவிடாதா
மென்மயிர் அடர்ந்த உன்
முன்வளைக்கரம் தொட்டு
உணர்த்திவிடாதா
அனிச்சையாகவேனும்
ஏதேனும் நிகழ்ந்துவிடாதா
தீண்ட நீளும் விரல்களின் முன்
சுருங்கும் என் புலன்கள்
சூழலின் உறுத்தல் மீதூற
கழுத்தை அழுத்தித் தேய்த்துக் கொள்கிறேன்
மேசை மீது வைக்கப் பெற்றிருக்கிற
நிறமும் வளைவும் மினுமினுப்பும்
உன் கழுத்தை நினைவூட்டும்
யாரும் இதுவரை தொடாத
தேநீர்க்குவளை புகைகின்றது.

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - புலன்மயக்கம்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - புலன்மயக்கம்

https://padhaakai.com/2017/04/23/sensory-illusions/

Monday, February 20, 2017

எதிரே ஓடும் நதி

எதிரே ஓடிக் கொண்டிருந்த 
நதியைப் போலொரு பெருக்கு 
என்னுள்ளும் 


உயர்ந்து அமிழ்ந்து 
மறைந்து போயினும் 
காலாதீதமாய் விரைந்த தடம் 
காணக்கிடக்கிறது 

உயிர் அருந்தி 
வறண்ட கரைகளில் 
விடாது அள்ளினாலும் 
என் தடம் மறைய 
ஆகும் இன்னும் 
ஆயிரம் காலம் 

இயற்கையின் கவிதை

haiku1
அவ்வப்போது
நிலவின் ரசிகர்களுக்கு
ஓய்வளிக்கும் முகில்கள்
– மட்சுவோ பாஷோ
haiku2
மேற்கின் காற்றில் எறியுண்டு
கிழக்கில் சேர்கின்றன
உதிர்ந்த இலைகள்
– யோசா புஸோன்
haiku3
என் வாழ்வு –
இன்னும் எவ்வளவு மீதம்?
இது குறுகிய இரவு
– மசஓகா ஷிகி
haiku4
குளிர்காலக் காடெங்கும்
உதிர்ப்பதற்கு இலைகளின்றி
கடுஞ்சினத்துடன் ஓலமிடும் காற்று
– நட்சுமே சோசெகி
haiku5
இந்தப் பாதையில்
யாரும் பயணிப்பதில்லை என்னைத் தவிர,
இந்த இலையுதிர்கால மாலையில்
– மட்சுவோ பாஷோ
haiku6
இலையுதிர்காலத்தின் முதற்காலை
நான் பார்க்கும் கண்ணாடி
என் தந்தையின் முகத்தைக் காட்டுகிறது
– முரகாமி கிஜோ
haiku7
விளக்கு அணைந்ததும்
சன்னல் சட்டகத்தினுள்
நுழைகின்றன குளிர் விண்மீன்கள்
– நட்சுமே சோசெகி

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் 7 ஹைக்கூ கவிதைகளின் மொழியாக்கம்

Pandit Venkatesh Kumar and Raag Hameer