Monday, September 19, 2016

அணைதல்

கண்கள் எரிய 
பார்த்துக் கொண்டிருந்தேன் 

வெளியும் இருளும் 
கலங்கிக் குழம்பி 
வண்ணங்கள் மறைந்து தோன்றி 
வடக்குவான் ஒளித்திரையின்  
நினைவையழிக்கும் 
குழப்பச் சித்திரம் போல் 
நிறமற்ற நிறம் 
ஒளியற்ற ஒளி 

தெளிவைத் 
தேடவும் தோன்றா 
சுயஅழிவின் கவர்ச்சி 

திரைவிலக்கி இருள்கூர்ந்து 
ஒற்றைச்சுடர் ஒளிர்வில் 
நிலைக்கக் கண்டேன் 

ஒரு சுடரின் பிறந்த சுடர் 
ஓராயிரம் சுடரூட்டுதல் 
உயர்வன்றி வேறென்ன

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer