Friday, February 5, 2016

இருவர்

கருவறையின் இருட்டில் 
குறைபட்ட கையிறக்கி 
குருட்டு ஈயை 
காப்பாற்றி மகிழ்ந்தார் 
தேவன் 

பல்லிக்கு 
படியளப்பதெப்படி என 
கவலையில் மூழ்கினாள் 
தேவி 

திரிபுரமெரித்த தேவன்மாரும் 
பழத்துக்கு பிள்ளையை 
பரிதவிக்கவிட்ட தேவியரும் 
நிறைந்த இப்பூவுலகில் 
இப்படியும் இருவர் 

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer