Friday, January 29, 2016

காலமருள்

இலைகள் விழுந்து சருகாவதிலும் 
சருகாகி காற்றில் வீழ்வதிலும் 
நியதிகள் எங்கும் மீறப்படாதபோது 

கதிர்க்கற்றைகள் நிறம் தேய்ந்து
சுடர்  அடங்கி அணைந்தாலும் 
ஒற்றை விளக்கின் திரியிழுத்து 
இருளின் கருமையில்  இணைந்தாலும் 
புலரியின் பொலிவு குறைபடாதபோது 

சொற்களின் குறைவில் பிறந்தாலும்  
மிகுசொல் சேர்ந்து நிறைந்தாலும் 
கவிகளின் வீச்சு கறைபடாதபோது 

அலை வீசி ஆர்ப்பரித்து
கரை தாண்டி சென்றாலும் 
கால்தடவி கலம்தாங்கி 
கட்டுக்குள் நின்றாலும் 
ஆழியின் அற்புதம் புரிபடாதபோது

அனைத்தும் ருசிக்க
அனைத்தும் புரிய
அனைத்திலும் இழுபட
அனைத்திலும் இழிபட

நான் 
காத்திருப்பதில் தவறென்ன?

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer