Sunday, December 13, 2015

கால்கள்

மழைக்கால நடைபாதைகளில்
கவனியாது விரையும்
மாபலிக் கால்களினூடே
கூன்சுமந்து ஊரும்
நத்தைகளை
பதைபதைத்து நோக்குகிறேன்

அறியாது அவை
மாபலிக்கும்
காத்திருக்கும்
பிறிதொரு வாமனக் கால்கள் 

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer