Sunday, January 11, 2015

பாலி ஒரு பூ

விமானமிறங்கி 
ஊருக்குள் நுழையுமிடம் 
வீதியின் இருமருங்கிலும் 
கவியும் இலையடர்த்தியில் 
மென்மணம் பரப்பி 
வரவேற்கிறது 


தங்குமிடம் சேர்கையில் 
வரவேற்க காத்திருப்போரில் 
புன்னகைத்து வீற்றிருக்கிறது 

உள்ளே நுழைகிறீர்கள் 
உச்சகட்ட கொதிப்பில் 
மணியாரத்தை கழற்றி வைக்குமிடம் 
மலர்ந்திருக்கிறது ஒரு பூ 

மனைவியின் மேனி வாசம் 
அறைக்கு வெளியிருக்கும் உங்களை  
உள்ளிழுக்கும் பொது 
வெண்ணிற மெத்தையின் நடுவே 
கிடந்தது கிறக்குகிறது 

மாலை கவிந்ததும் 
நாதம் கலந்து உலவும் 
குளிர் காற்றில்  
சுகந்தம் சேர்ந்து கமழ்கிறது 

குளியறையில் 
உணவருந்தும் விடுதியில் 
கடைகளின் பேர மென்னிரைச்சலில் 
ஏறித் தீராத 
மிக அழகிய கோவில்களில் 
காலை பூசைக்கு 
அணிவகுத்துச்  செல்லும் 
பேரழகிகளின் தட்டங்களில் 
பூசனை தீர்ந்து 
திரும்பும் பேரழகிகளின் 
கூந்தல்களில் என 
எங்குமிருக்கின்றன 




உங்களுக்குள் என்றுமிருக்கும் 
புன்னகையை 
மகிழ்ச்சியை 
உங்கள் முன் நிறுத்தும் 


பாலி ஒரு பூ 

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer