Sunday, August 24, 2014

மறத்தல்:பறத்தல்

விண்ணில் பறத்தல்
மண்ணை மறத்தலே

சிறகசைவுகளின் இடையே
மண்ணின் ஈர்ப்பு
தரையிறக்கும் கால்களை

















கூரலகை விண் நோக்கி
எழும்பி விட்டாலோ
மண்ணழிந்து போகும்
அடுத்தொரு காற்றலை வரும் வரை

கொடுங்காற்று
சிறகடர்த்தியை பறித்தாலும்
அலகு விண்ணே நோக்கும்
விசை குறைந்தே பறந்தாலும்
நினைவை சென்றடையும்

சுயமும் இருப்பும்
முயங்கும் வெளியில்
மறத்தலும் பறத்தலும்
மறைந்தே போகும்
இருத்தலும் இறத்தலும்
கரைந்தே தீரும்

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer