Sunday, October 13, 2013

அன்புள்ள ஜெயமோகன்

அன்புள்ள ஜெயமோகன்,

புறப்பாடு தொடர் படித்து வருகிறேன்

எத்தனையோ வாழ்வியல் அனுபவங்களை படித்தும் கேட்டதுமுண்டு.
இந்தப் பதிவுகள் பலருக்கு பல விதத்திலும் ஒரு சிகரமாக இருக்கப் போகின்றன.

முழுதும் முடிந்த பின்னர் ஒரு மிக நீண்ட உணர்வுக்குறிப்பு எழுத திட்டம்.

ஆனால் முதலில் சொல்ல வேண்டுவது முதலில்.

ஐம்பது வயதின் அனுபவங்களோடு முப்பது நாற்பது வருடங்கள் பின்னோக்கிப் பார்த்து எழுதும் போது, இயற்கையாக நிகழ்ந்து விடக் கூடிய, இப்போதைய அறிவும் அனுபவமும் தற்குறிப்பாக நிகழ்வுகளை ஆராயும் எந்த சாத்தியங்களும் தென்படா வண்ணம், அந்த வயதுக்கே உரிய அறியாமையும், அலைக்கழிப்பும், உணர்ச்சிகளும் மிக எழுதுகிறீர்கள். இது ஒரு அரிய எழுத்து சாதனையென எண்ணுகிறேன்.

பற்பல சம்பவங்களில் என்னை நான் கண்டதுபோல் உங்கள் வாசக நண்பர்கள் அனைவரும் தங்களைக் காண்பார்கள்.

பதற்றமுடன் ஒவ்வொரு நாளின் விடிகைக்கும் காத்திருக்கும்,

சரவணன்

சிங்கப்பூர்

Pandit Venkatesh Kumar and Raag Hameer