Sunday, June 24, 2012

தொலைந்த விளி


மலட்டுப் பறை முழக்கி
முரண்ட கை பொத்தும்
நார் தேடி உதிர் பூக்கள்
அரற்றும் மணம்
கனவுக் கடைவீதியில்
தொலைந்து போன இது
என் விளி

வருணன் பொய்த்து
வான் நோக்கும்
நனவுப் புழுக்கங்கள்
கிழிந்த சேலையின்
ஊசி நூல் துணுக்குகள்
எச்சில் ஒழுக
திகைத்த குழந்தை
அரற்றும் இறுதியில்
அழும்

விழி வழி வழியும்
விளி
விலாசம் தேடி
விரையும்
விளைவெனில்
வினைஎது

எப்புரையின் குருதி
எவர்கைத் தீர்மானம்

தூரிகை நாரென
கண்ணீர் குழைத்து
உணர்ச்சியற்று பூசி
உன் படம் எழுதும்

உதாசீனப் படுத்து
உவகை கொள்
செவி நிறை
சென்று மறை
ஆயின்
கண்ணீர் நாக்கு உன்
காதுளற
விடை விளித்து போ
என் விளியே

- 8/10/89

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer