Tuesday, June 26, 2012

ஓர் அந்திமாலையின் மழை நேரம்


மழை பெய்து கொண்டிருக்கிறது

அந்தியிலிருந்து இரவுக்கு
இடம் மாறும் நகரத்தின்
நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலை
உன்னையும் என்னையும்
உறுத்தாவண்ணம்
குளிரூட்டப்பட்ட காருக்குள்
நானும் நீயும்

'முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்பூவாய்...'
இசையில் குரலில் வழியும் தாபம்
இசையை தவிர
வைப்பரின் தாளம்

பல வருட உறவு
ஒரு வருட பிரிவு

அருகிருந்தும் ஒரு
மனவிலகல்
ஏதேதோ கற்பிதங்கள்

உண்மைகளை உரத்து
ஒத்துக் கொள்ள
இருவருக்கும் ஏற்பில்லாதவொரு
இடைவெளி

பிரிவின் வருடத்தில்
எத்தனை வலிகள்
அத்தனை வருட
உறவின் மூலமறுக்கும்
வலிகள்
இரவின் நெருக்கமுணர்ந்த
படுக்கையில்
தனியே தனியே
கரைந்து துடைத்த
வலிகள் வலிகள்

'நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தால் தகுமா...'

சகிக்க முடியவில்லை
இந்த மௌனம்

பாடலின் அழகு குறித்து வினவுகிறேன்
அவளின் குரல் உணர்த்தும்
உணர்ச்சி குறிக்காமல்

மிகக் குறுகிய
ஆயினும் மிகநீண்டதோர்
ஆவிநின்ற
இடைவெளிக்குப் பிறகு
தாபமும்
வலியும்
தயையும்
தன்னிரக்கமும் பொதிந்து
'ம்' என்கிறாய்

அத்தனை உணர்வுகளையும்
ஒற்றை அசையில்
ஏற்பதற்கு
கழியும் நொடிகள் நிமிடங்கள்

சாலையில் இருந்து
பார்வையை திருப்பி
உன்னைப் பார்க்கிறேன்
பாடல் நிறைவடைந்தும்
வெளி நிறைந்து கிடக்கிறது

கார் மழையினூடே
விரைந்து கொண்டிருக்கிறது

S. ஜானகியின் சிறந்த பாடல்கள்


ஜானகி பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் சிறந்த பாடல்களை பலர் தொகுத்திருக்கக் கூடும். சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள், திரைஇசை தொழில் நுட்பங்கள் மற்றும் மக்கள் விரும்பிய பாடல்களில் அவரின் பங்களிப்பு என பற்பல வகைகளில் பகுத்திருக்கக் கூடும்.

நானும் என் மனதுக்கு பிடித்த ஜானகியின் தமிழ் திரை இசைப் பாடல்களை தொகுத்திருக்கிறேன். இந்தத் தொகுப்புக்கு மேற்கூறிய எவ்வித மேதைமை பொருந்திய அளவீடுகள் இல்லை. இவை முழுக்க முழுக்க என் கணிப்பில், என் ரசனையின் குறைபட்ட வட்டத்துக்குள் என்னை மகிழ்வுடன் உலவ வைத்த தனித்துவம் கொண்ட பாடல்கள் மட்டுமே.

எனக்குப் பிடித்த ஜானகியின் தமிழ் திரை இசைப் பாடல்களின் பட்டியல்

- என்ன மானமுள்ள பொண்ணுன்னு மதுரையில - சின்ன பசங்க நாங்க


- சின்னத்தாயவள் தந்த ராசாவே - தளபதி


- மெட்டியொலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட - மெட்டி, ராஜாவுடன்


- நதியிலாடும் பூவனம் - காதல் ஓவியம்


- ராசாவே உன்ன நம்பி - முதல் மரியாதை


- தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே -


- கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும் - அவள் ஒரு தொடர்கதை


- பூமாலையே தோள் சேரவா - பகல் நிலவு


- வைதேகி ராமன் கை சேரும் காலம் தை மாத நன்னாளிலே - பகல் நிலவு


- நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை - பாலூட்டி வளர்த்த கிளி


- கனவோடு ஏங்கும் இளம் பூங்கிளி - அன்பே ஓடி வா


- மஞ்சக்குளிச்சு அள்ளி முடிச்சு - பதினாறு வயதினிலே


- புத்தம் புதுக் காலை பொன்னிற வேளை - அலைகள் ஓய்வதில்லை


- பூவே பனிப் பூவே நானும் மலர் தானே -


- நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே - ஆத்மா


- கொத்தமல்லிப் பூவே புத்தம்புது காத்தே - கல்லுக்குள் ஈரம்


- எண்ணத்தில் ஏதோ சில்லென்றது - கல்லுக்குள் ஈரம்


- செந்தூரப்பூவே - பதினாறு வயதினிலே


- குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய் - கவிக்குயில்


- அடடட மாமரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலியே - சிட்டுக்குருவி


- தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் சிந்தும் - நிழல்கள்


- என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது


- பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் - கழுகு


- ஓலைக்குடிசையிலே பழஞ் சேலைக்குள் - ஆனந்த்


- அழகு ஆயிரம் உலகம் முழுவதும் - உல்லாச பறவைகள்


- எந்தப் பூவிலும் வாசம் உண்டு - முரட்டுக் காளை


- அன்னக்கிளி உன்னத் தேடுதே - அன்னக்கிளி


- மச்சானப் பாத்தீங்களா - அன்னக்கிளி


- பொன் வானம் பன்னீர் தூவும் இந்நேரம் -


- நாதம் என் ஜீவனே - காதல் ஓவியம்


- காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே - ஜானி


- வசந்தக் கால கோலங்கள் - தியாகம்


- நதியோடும் கடலோரம் ஒரு ராகம் அலைபாயும் - ஆவாரம்பூ


- பூவரசம்பூ பூத்தாச்சு - கிழக்கே போகும் ரயில்


- இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ - கொக்கரக்கோ


- தாழம்பூவே கண்ணுறங்கு தங்கத்தேரே கண்ணுறங்கு


- வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம் - முதல் மரியாதை


- நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு


- தேன் சிந்துதே வானம் - பொண்ணுக்கு தங்க மனசு


- உள்ளம் எல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குளே ஏதேதோ - தூரத்து இடி முழக்கம்


- சுந்தரி கண்ணால் ஒரு சேதி - தளபதி


- எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ


- சின்னக் கண்ணன் அழைக்கிறான் - கவிக்குயில்


- ஏதோ மோகம் ஏதோ தாகம் - கோழி கூவுது


- நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில்



- காற்றுக்கென வேலி கடலுக்கென்ன மூடி - அவர்கள்


- இப்படியோர் தாலாட்டு பாடவா - அவர்கள்


- நினைத்தாலே இனிக்கும் - நினைத்தாலே இனிக்கும்


- பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் - நினைவில் ஒரு சங்கீதம்


- போட்டேனே பூவிலங்கு - பூவிலங்கு


- வான் மேகங்களே வாழ்த்துங்கள் - புதிய வார்ப்புகள்


- அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை


- மௌமான நேரம் இள மனதில் என்ன பாரம் - சலங்கை ஒலி


- பால கனகமய - சலங்கை ஒலி


- தேவன் கோயில் தீபம் ஒன்று - நான் பாடும் பாடல்


- தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ - தூறல் நின்னு போச்சு


- உறவெனும் புதிய வானில் பறந்ததே இதய மோகம் - நெஞ்சத்தைக் கிள்ளாதே


- அழகிய கண்ணே உறவுகள் நீயே - உதிரிப் பூக்கள்


- வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் வேண்டும் - அவள் அப்படித்தான்


- நான் உந்தன் தாயாக வேண்டும் - உல்லாசப் பறவைகள்


- தேனருவியில் நனைந்திடும் மலரோ - ஆகாய கங்கை


- மலர்களே நாகஸ்வரங்கள் மங்கள தேரில் - கிழக்கே போகும் ரயில்


இந்தப் பட்டியலை எழுதி முடித்துப் வாசித்து பார்க்கையில் சில குறிப்புகள் தோன்றுகின்றன:

- ராஜாவின் இசையில்தான்  ஜானகியின் குரல் வளம், வீச்சு மற்றும் நுட்பம் உச்சத்தில் இருந்திருக்கிறது மற்றும் ராஜா ஜானகியின் திறமையை மிக ரசித்து, தெரிந்து அவரை பாட வைத்திருக்கிறார்

- ராஜா ஜானகிக்கென்றே பாடல்களை உருவாக்கி தந்திருக்க வேண்டும்

- வெற்றி பெற்ற ஜானகியின் பாடல்கள் இரண்டு மூன்று பாடல்களாக சில  வெற்றி  பெற்ற படங்களில் இடம் பெற்றிருக்கின்றன - அவர்கள், கவிக்குயில், தளபதி, உல்லாசப் பறவைகள் - இப்படி

இவற்றில் ஒவ்வொரு பாடலுக்கான என் சுய அனுபவ குறிப்புகளுடன் எழுத வேண்டுமென்ற ஆவலிருக்கிறது. பார்ப்போம்.


Sunday, June 24, 2012

Night Safari @ Singapore


A Scene from Ramayana in the room of Banyan Tree Hotel, Bangkok


நண்பனின் கடிதங்கள் - 6



கூடிக் களித்துக் கொண்டாடி
கூட்டம் தவிர்த்து கூட்டம் போட்டு
வாழ்க்கை வாலிபம் வல்லமை
வையகம் வளர்க்கும் பொய் அகம்

நிஜத்தில் தேங்கும் நிச்சயம் - மற்றும்
நித்தமும் வளர்த்த கங்கணம்
உடைத்துச் சேர்த்த உண்மை - முற்றும்
கடைந்து தேர்ந்த கவிதை

காதல் கோர்த்த கற்பனை
கண்ணில் பார்த்த காலம்
சாதல் ஜெயித்த சகம்
சுகத்தில் லயித்த சுயம்

எல்லாம் நானாய் என்னிலும்...
என்னைப் பார்க்கும் உன்னிலும்...

கடந்த நாட்கள் கவிதைகள் சொல்வன
காவிய வித்தென கடிகளும் சுற்றின

வாழ்ந்த நாட்களை வாழ்ந்த விதமோ
வாழும் நாட்களை வாழும் விதமோ
முரணோ இல்லை முதிர்வெனச் சொன்னால்
உடன்பட நிஜமோ ஒவ்வாதி றக்கும்

பரிணாமம் இதுவோ பரிகாரம் எதுவோ
பரிச்சயம் தோற்பின் பரஸ்பரம் எழுமோ
விதியோ வினையோ வேல்விளை யாட்டோ
இருமுனை கூறெனில் எவர்ஜெயிப் பாரோ

பொய்யல்ல நண்பா இதுநம் இடைத்திரை
போலி மூட்டம் பெரும்பொய் நாடகம்
உடையும் நிஜங்கள் உணர்த்தும் சேதி
உனக்கு மட்டுமா எனக்குந் தானே

போருக்குத் தானே புறப்பட்டு வந்தேன்
போர்க்களம் இன்றோ மனதில் தானே
எந்தச் சிலம்பை எவள் உடைத்தாளோ
இந்தப் பரல்கள் எப்படி வந்தன

சொல்லும் வல்லமை எனக்கிலை தோழா
சொப்பன நிஜங்கள் போதும் போதும்

வந்து போகும் வாழ்க்கை போகும்
தந்து போகும் செல்வம் போகும்
வெந்து போகும் உடலும் போகும்
வேகா நிஜங்கள் போதும் போதும்

- ரமேஷ் சண்முகம்
1990 - 91

மூன்றாம் நாள் உயிர்ப்பு



என் மிச்சங்கள் வேண்டும்
இயேசுவின் கை
அப்பத் துணுக்குகள்
பெருக என்னை
விதையுங்கள்

எல்லாச் சிலுவைகளிலும்
என் குருதி
அத்தனைத் சிரசுகளிலும்
என் முள் கிரீடங்கள்

தவமே இதுவும்

விலாக்காயம் பெருகிவோட
மகிழுங்கள்
கவிழ்த்த மதுக்கோப்பையில்
சாறு பருகி
அப்பம் தின்று
மிச்சம் வீசட்டும்
உங்கள் கைகள்

என்னறிவு யாருக்கென
பகடையுருட்டி
பங்கிடுங்கள்

மிச்சம் பொறுக்கும் கைகளுக்கும்
மீதம் வையுங்கள்

ஆயினும்
கைகழுவி விடாதீர்
என் நண்பரே
உம் கைகளை
அந்தப் பிலாத்துவைப் போல்

- 9/10/89

தொலைந்த விளி


மலட்டுப் பறை முழக்கி
முரண்ட கை பொத்தும்
நார் தேடி உதிர் பூக்கள்
அரற்றும் மணம்
கனவுக் கடைவீதியில்
தொலைந்து போன இது
என் விளி

வருணன் பொய்த்து
வான் நோக்கும்
நனவுப் புழுக்கங்கள்
கிழிந்த சேலையின்
ஊசி நூல் துணுக்குகள்
எச்சில் ஒழுக
திகைத்த குழந்தை
அரற்றும் இறுதியில்
அழும்

விழி வழி வழியும்
விளி
விலாசம் தேடி
விரையும்
விளைவெனில்
வினைஎது

எப்புரையின் குருதி
எவர்கைத் தீர்மானம்

தூரிகை நாரென
கண்ணீர் குழைத்து
உணர்ச்சியற்று பூசி
உன் படம் எழுதும்

உதாசீனப் படுத்து
உவகை கொள்
செவி நிறை
சென்று மறை
ஆயின்
கண்ணீர் நாக்கு உன்
காதுளற
விடை விளித்து போ
என் விளியே

- 8/10/89

Pandit Venkatesh Kumar and Raag Hameer