Sunday, December 16, 2012

Sights, Sounds & Food @ Penang

Dato' Azharuddin A Rahman, Director General, Dept of Civil Aviation, Malaysia  Presenting at Emerging Airports Conference, Penang, Malaysia

Marine Drive, Penang

Water Front

Another View of the Skyline




Aboard the Ferry - To Mainland Penang

Concluding the conference

Majestic Victorian Clock Tower in Little India


Monday, November 12, 2012

5 குறுங்கவிதைகள்

கற்றுக் கொண்டவைகளை கணக்கு வைத்திருக்கவில்லை
கணக்கும் கற்றுக் கொண்டது  தானே


ஒழுகி விழுந்தது ஒழுக்கம் இடையில்
நழுவித் தொலைந்தன கற்பிதங்கள்



என்னிலிருந்து இறங்கிச் சென்றவனை கண்டேன்
கண்டவனை கண்டு கொண்டேன்


சொற்களை சிந்தி எண்ணங்களை விதைத்து
செயல்களை வேண்டினேன்
அவநம்பிக்கை கிளைத்து அனர்த்தங்கள் விளைந்து
உன்மத்தம் சித்தித்தது


உடனுறைந்தும் தானுணரா தத்துவம்
அனைத்தும் நிறைந்தும் ஆருமறியா  சித்தாந்தம்
உணரக் கூடாத வினைகள்
புரிந்தவை கொண்டு
அளக்க முற்படும்
அறிவின்மை
அளக்க முடியா
அறிவின்மையை அறிவதே
அறிவல்லவா

 

Sunday, October 14, 2012

Ilaiyaraja - The Composer Par Excellence

Haven’t we all seen enough farcical interviews with celebrities, dishing out the same archaic questions with formulaic patterns and clichéd expressions? Have we not wondered on the credibility and the preparedness of the interviewers? On why interviews can’t be more thought provoking? On why can’t, instead of being superficial on issues or delving on only the laurels of the interviewee, the interaction be honest and bring out the unknown secrets of the accomplished who is sitting across the table?

I have seen scores of such empty conversations laden with empty euphemisms or stage-managed outpouring of emotions. This is so true, especially with Indian filmdom and more so in the Tamil filmworld.


In previous interviews of Ilaiyaraja, as always is the case, questions were asked by lesser mortals on how he wrote that score or this; how he met that director or this musician; how he felt about that success or this failure.

None had ever moved closer to the man’s genius or for that matter ever attempted to unravel the mystery surrounding his working style, thought processes in writing music and only felt too enamoured to unfacade his philosophical utterances. 


Till I saw Gautam Vasudev Menon’s interview with Ilaiyaraja in the pretext of Neethaane En Ponvasantham’s audio launch, this remained so true that I started watching this interview with oh-no-not-again feeling.

I was wrong. Pleasantly so.

The interview, which lasted 45 minutes in all, was refreshing, eloquent and was a well-planned search of Ilaiyaraja’s musical philosophy.

All that I had longed to know about his creative process, his comfort zones and his understanding of music and its creation was queried by Goutam.  Goutam was a class act in the process, equal in task, in the unnerving presence of Raja and deftly stayed clear of the 'throw-you-off-the -guard' philosophical expressions of Raja.

The thoroughness of Goutam’s seemingly questionnaire (though he never looked at one), stemmed from the fact that he is an accomplished writer himself. His eloquence was to the fore when his questions, even when they were long and were about complex themes, as it was clear and precise in argument too. His style was not flowery, not rustic and not at all adulatory.

Raja, on the other hand, was relaxed, welcoming and approving of Goutam’s searching questions. It was as though he was waiting for such a moment to happen and was ready to share his understanding of music and its creation. Surprising, as Raja is known for his uninteresting interviews where he usually turns out to be a nervous man, always ready to jump at a discordant note or return back to his disarming philosophical reverse questioning mode.

Probably the rarity of the musical score of Neethaane En Ponvasantham, as he admits, did the trick.

Raja’s thought process in creating music

There are certain elements, which he describes as his basis while writing music, while Goutam asks him pointedly about the thought process.

“I need to be true to myself first”, says Raja and continues, “I should not fall into any fixation that a given director needs/deserves this music”. This, I feel, has more toward his equality and commitment to all the directors with whom he had worked - irrespective of their merits, and towards his own creative conviction. He further elaborates that he should not have any motivation while he starts writing the music! 

A very deep observation.  Best understood by a factual expansion of his first statement - which he does not show any emotion to the cast, crew or budget or to any other extraneous parameters but is only commissioned on the theme and what it demands from him.

“Music should happen on the spot; at that moment”, he says, an often repeated system of Raja, this time with an analogy. “A sculpture transforming at the hands of the sculptor, freezes in time when it attains its finality. It stays that way for centuries to come; music should happen and it happens to me thus. It has to flow spontaneously”.

Discerning the Discipline and Dedication in Music Creation

When Goutam admits that his understanding of music was defined by Raja’s songs through his youth, he also mentions that he was hesitant to approach the man with whose music he grew up with. He was only waiting to attain a stage (after 12 successful films) when Raja would feel comfortable working with a him, now a seasoned creator, a successful one with a reasonable music-to-visual sense.

 “The creation and presentation of NPV’s (Neethaane En Ponvasantham) music is a new experience to me; it has never happened to me with anyone…” was what Raja says - a very strong statement for a man whose career had spanned more than 36 years and with scores for over 950 films.

“I know the dedication of the musician to his instrument; I also know how it should sound when a group of musicians play a single note in unison,” defining the musical discipline, which he is often feared for.

The Process of Writing Music

Raja’s method of writing scores is self-balanced, he says. The aural volumes of different instrument sections are built into the score and hence the engineers do not need to balance the volumes after the recording. He further explains that as he writes the score, he decides, again spontaneously, which instruments groups need to be engaged at which point, and how many instruments are needed in each group. It was amazing when he said that for a certain song in NPV he had originally written the music for 12 string instruments but on inspecting the recording theatre, he had to cut down on the number of violins to engage as he felt so many would sound harsh.

Musical Genre of Neethaane En Ponvasantham


“I realized that I am capable of writing this kind of music after I finished writing this…” said Raja. He and Goutam discuss about how the Hungarian conductor and the British musicians and engineers, while working for the NPV album, had said that the music was not western classical music nor could it be classified as Indian music.

“Watch out for this new genre of music, Goutam. This sounds new. And this is Raja’s music” was what the conductor from Budapest had said. “This is world music and you cannot name it”, should have been nostalgic to Raja’s ears who had called his first non-film album, ‘How to name it?’ 25 years ago.

Differentiating between Similar Situations and Creating New Musical Scores – Avoiding ‘Musical Intention’

How does he differentiate between what to offer for a specific situation –even when he had to listen to hundreds of directors demanding thousands of tunes for romantic scenes? How had he ensured that he delivered a different sounding song every time?

Here is where the mastery, the unbelievable precision and the razor-sharp memory weigh in. While writing the score, he says he could realize whether the incumbent tune resembled any of his other tunes. What results is a spontaneous rendering of an alternative tune. “There should be no intention” he says.

The Musical Journey

“How can I define? I have lived my life. I followed it, committed mistakes, learnt from them and disciplined myself”, Raja muses. Philosophically, he states that, “Raja is dead. I am lost. How can I bear myself praising myself? Haven’t I learnt only this much? With all my limitations, I do not know how my composition pours out as music. The moment I could decipher that mystery, I will stop”.

Resonance with the Masses

Thousands everyday listen to his music. He has provided solace and happiness tomillions through his compositions. How does he see this contribution?

A wonderful analogy then flows from the Maestro. He uses the ‘Alpha Rhythm’ principle which states that one of the two instruments, placed close to each other, will resonate in accordance, when the other is strung – if both are in tune.

He, another rarity of this interview, muses, “In the beginning (of my career), I used to wonder. After the success of Annakili (his first film 36 years ago), I used to ask myself - why do the masses like this music? Why do they accept that this is good? I have not canvassed them. I did not persuade them to listen to my music. Yet why are they loving this?

In a profound statement, Raja then declares that that was not him who made the millions happy by providing the music. It was the people who have made themselves happy by identifying themselves with his music. His music was theirs. They were already attuned and his music touched that right concordant note.

Profound indeed. And brilliantly presented.

Legacy of Raja’s Melodies

Signifying the anguish of many original creators who feel that the current generation is often fed with lesser music – living the short-lived life purely by the packaging and by the different sounding recording, Goutam felt that ‘this (Raja’s) is music; this is classic; and this is style. This should be taken to the younger generation. In a bold new sound, Raja's melodies, as heart and soul, will be the new music of the new generation.’

“I want to talk to them. Interact with them. I want to reach out to the people and pass my experience to the future generation”, Raja’s statement concludes as the well-choreographed interview draws to a close.

I could see that it was Goutam’s easy approach which made the great man reveal so much about his beliefs and processes. The interview, I am sure, would have been a first for Raja too, as he often emphasizes about the uniqueness of NPV's music and about its creation process.

Kudos to Goutam Vasudev Menon!

Saturday, October 13, 2012

விருமாண்டி - நேர்மையின் காதல்

த்தனையோ விமர்சனங்கள், தாக்குதல்களைத் தாண்டி விருமாண்டி வெளிவந்த அந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்து...


அந்தத் திரைப்படத்தை எத்தனைக் கோணத்தில் பார்க்க முடியுமோ அத்தனைக் கோணத்திலும் பார்த்து விமர்சனங்கள் வந்ததுண்டு.  தேவரினத்தை தூக்கிப் பிடிக்கும் கதை, தென் தமிழகத்தில் நிலவும் கடிய சாதிய அமைப்பை விமர்சிக்கும் படம், இனக்குழுக்களுக்குள் பலியாடாக மாறியலையும் இளைஞர்களின் கதை, மடிந்து வரும் விவசாயத்தை பற்றிய விமர்சனம், காவல் துறை/நீதித் துறை/சிறைத்துறைகளுக்குள் நிலவும் ஊழலைப் பற்றிய விமர்சனம்...

இது போக, அந்தத் திரைப்படமே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் 'மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம்' என்பதுவும் ஒன்று.

ஆனால், பற்பல வருடங்கள் கழித்து மீண்டும் விருமாண்டியை மீண்டும் பார்த்த போது இயக்குனர் கமல் ஹாசன் அந்த கதைக்குள் பொதிந்திருக்கும் ஒரு மிக அழகிய காதல் - எவ்வித தயக்கங்களுமில்லாத, நேரடியான, உணர்வுபூர்வமான, அதனாலேயே பச்சை வாசனை அடிக்கிற காதல், என்னை தாக்கியது.

என்னைக் கேட்டால் மேற்கூறிய விருமாண்டியை பற்றிய அத்தனை அடையாளங்களையும் மீறி, தமிழ் திரையில் வந்த மிக உணர்வு பூர்வமான ஒரு காதல் கதை என்று ஐயமில்லாமல் கூறுவேன். படத்தின் நீளக் கணக்குப்படி பார்த்தால், அன்ன லட்சுமியும் விருமாண்டியும் திரையில் காதலர்களாக வரும் பகுதி மிகக் குறைவு. ஆனால், அவர்களின் பாத்திரப் படைப்புகளும், வசனங்களும், அபிராமி-கமல் நடிப்பும் என் புலனில், அன்ன லட்சுமி-விருமாண்டி காதலை செதுக்கி விட்டன.

மிகக் குறைந்த உரையாடல்கள்...

இத்தனைக்கும், அவர்களிருவரும் ஒன்றாக இருக்கும் போதெல்லாம் அவனின் துடுக்குத் தனமான பேச்சே முன்னிற்கிறது; அவளின் வெட்டி விடும் வார்த்தைகள். நெருக்கம் கூடக் கூட, அவன் அவளிடம் தன் இயலாமைகள், ஆதங்கங்கள், பொருமல்கள் என தன்னைத் திறக்கிறான். அவள் மெதுமெதுவே ஒரு தோழியாக மாறுகிறாள். கொலைகள் நடக்கும் போது, கிணற்றுக்குள் அமர்ந்து, அன்னலட்சுமியின் மடியில் தலை புதைத்து விருமாண்டி அழுதவாறே பேசும் இடம்!

ஊரை விட்டு கிளம்பி, நள்ளிரவில் நிலவொளியில் காட்டுக்குள் முயங்கும் போதும் ஓர் ஆழமான புரிதலே வெளிப்படுகிறது. அவள் நகத்தால் தன் மார்பில் காயமேற்படுத்தி காமம் கூடக் கூடும் காட்சியில், அப்படியோர் அந்தரங்கத்தை, காதலின் தனிமையை, வஞ்சிக்கப்பட்ட காதலை நான் எப்போதும் உணர்ந்ததில்லை.

யன்னல் கம்பிகளை பிடித்தவாறு நிலவை ஏக்கத்துடன் பார்த்து நிற்கும் புதுக் காதல் மனைவியை, விருமாண்டி கேட்கிறான் - 'என்ன விசனமா இருக்க? என்னடா, இப்படி ஒரு அசட கல்யாணம் பண்ணிக்கிட்டோமேன்னு நினைக்கிறியா?'. ஊரே பயப்படும் சண்டியர், சல்லிக்கட்டு காளையடக்கும் வீரன், ஊரில் பெரிய பணக்காரர்களில் ஒருவன் - கதை முழுதும் மற்றெல்லாவரிடமும் இதுதான் அவன் முகம்; முகங்கள். அவளிடம் மட்டும்தான் - அவன் தன் சுயத்துடன் நிற்கிறான். அவளை முழுமையாக நம்புகிறான்; விளையாட்டுதனத்துக்கும், சிரிப்புக்கும், குறும்புகளுக்கும், நையாண்டிக்கும் இடையே எப்போதும் அவன் கண்களில் அவள் மேலான மதிப்பும் (ஆம், மதிப்பு), நேசமும், காதலும் வழிந்து கொண்டேயிருக்கிறது.

காதலி/மனைவி இறந்து நாயகன் தனித்து வாழும் எத்தனை படங்களை பார்த்திருப்பீர்கள். விருமாண்டி, படத்தில் பேச்சு போக்கில் - 'அன்ன லட்சுமி இல்லாத வாழ்க்கை',  'அன்ன லட்சுமி இல்லாத இந்த வாழ்க்கை', என்று கூறுவதில் தெரியும் அவன் உணர்வு; அவன் நேசம்; அவர்களின் காதல். 'என்ன பெத்தா! (என் தாய் - அன்ன லட்சுமியை சொல்கிறான்), அவ இருந்தா, நான் இன்னிக்கு இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன்', என்று அவன் கூறும் போது என் மனதில் எழுந்த உணர்வுகளுக்கு வடிவமில்லை.


ஏஞ்சலாவிடம், சிறைக்கூடத்தில் தன் கதையை விவரிக்க ஆரம்பிக்கும் போது கூட, அன்ன லட்சுமியிலிருந்துதான் அவன் விவரணை தொடங்குகிறது. (மாறாக, கொத்தாளன் அவன் கதையை கூற ஆரம்பிக்கும்போது, தன் குல பெருமை, தன் ஊர் பெருமையில் தொடங்கி விருமனை பழிசொல்லி நகர்வதைக் காணலாம் - இது போல் படம் முழுதும் அவ்வளவு ஒப்புமை விவரங்கள் பொதியப்பட்டிருக்கிறது) மார்பில் அவள் நகத்தால் கீறி ஏற்பட்ட வடுவைக்காட்டி, "இது என்ன தெரியுதா? என்னோட ஆயுள்ரேகை;என் விதி; அன்ன லட்சுமியோட ஞாபகம்; அவ நகம்" என்கிறான்.


ஒரே ஒரு வடு - ஆயுள் ரேகையாகவும், விதிக் கோடாகவும், காதலியின் ஞாபகமாகவும் மாற வேண்டுமென்றால் அந்த காயமும் அதை உண்டாக்கிய காதலும் என்ன வலுவும், வலியும் நிறைந்ததாக இருக்க வேண்டும்! அந்த காட்சியில் ராஜாவின் பின்னணி இசை அத்தனை அவலமும், தன்னிரக்கமும் கூட்டி மறக்க முடியாத நிகழ்வாக மாற்றி விடுகிறது.


என்ன ஓர் உண்மை! வெளிப்பாடுகளில் அற்புதமான நேர்மை!

கொத்தாளத் தேவர், நல்லம நாயக்கர், கொண்ட ராசு, கோட்டைச் சாமி - என ஒவ்வொரு பாத்திரப் படைப்பும், எடுத்துக் கொண்ட கதைக்கான நேர்மையின் உச்சம். இதில் கொத்தாளத் தேவர், நல்லம நாயக்கர் இவ்விருவரிடையே உள்ள போட்டியை - நல்லம நாயக்கரின் வார்த்தைகளிலோ, அவரது ஆட்களின் வசனமாகவோ, கமல் நிரூபிக்கவில்லை. விருமாண்டி - கொத்தாளன் இருவரின் கோணங்களில் சொல்லப்படும் கதையிலும் அதுதான் நிலை. கத்தி மேல் நடப்பது தான் இது! தென் தமிழ் நாட்டில் முக்கிய சாதிய அமைப்பாக விளங்கும் முக்குலதோரியிடையே ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட கதைஅமைப்பு, கமலின் திரைக்கதை அமைப்புக்கு ஒரு சான்றே.

கொத்தாளன் மற்றும் விருமாண்டியின் பாத்திரங்களின் உளவியல் கூறுகளை, இத்திரைக்கதையின் மூலமாகவும், உரையாடல்கள் மூலமாகவும் ஆய்ந்து யாராவது எழுதினால், நல்ல திரைகதை மற்றும் பாத்திர படைப்புகளுக்கு பழகுவோர்க்கு உதவியாக இருக்கும்.

கொத்தாளனின் பாத்திர வார்ப்பு - தமிழ் திரைப்படங்களில் இல்லாத ஒன்று; இனியும் வரும் என்று தோன்றாத ஒன்று. மூக்குத்துவார முடி திருத்தி, அக்குள் மயிர் வழித்து, எப்போதும் நீறணிந்து, சுத்தமான உடைகளில் - வஞ்சமும், வெறியும் வழியும் வார்த்தைகள்! என்ன ஒரு நடிப்புத் திறன், உயரிய நேர்த்தி!


இதற்கிடையே, விருமாண்டியின் (கொரிய திரைப்பட விழாவில்  "ஆசிய சிறந்த திரைப்பட விருது' வழங்குகையில் குறிப்பிட்டது போல்) சிறப்புகளில் மிக முக்கியமானதொன்றாக நான் கருதுவது - பேச்சியம்மா, பேய்க்காமன் முதலிய நாட்டார் காவல் தெய்வங்களின் பின்னணியும், பூசைகளும், நம்பிக்கைகளும், பாடல்களும் படத்தில் பயன்படுத்தியிருக்கும் விதம் விருமாண்டி காலம் கடந்த நிற்கும் வாய்ப்பை உருவாக்குகிறது.

பாடல்கள், பின்னணி இசை, தள அமைப்பு, படப்பதிவு - போன்றவற்றின் ஆதிக்கம் தெரியா வண்ணம் கதையும், பாத்திரங்களும் இருந்தும் ராஜாவின் அற்புத பின்னணி இசை - சிறைக்கூட காட்சிகளில் அபாரம்.

கமல் என்ற அரிய கலைஞனிலும், அரியதாகவே கைகூடும் வெளிப்பாட்டு நேர்மை 'விருமாண்டி'யை ஓர் உன்னத காவியமாக்குகிறது.

Tuesday, June 26, 2012

ஓர் அந்திமாலையின் மழை நேரம்


மழை பெய்து கொண்டிருக்கிறது

அந்தியிலிருந்து இரவுக்கு
இடம் மாறும் நகரத்தின்
நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலை
உன்னையும் என்னையும்
உறுத்தாவண்ணம்
குளிரூட்டப்பட்ட காருக்குள்
நானும் நீயும்

'முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்பூவாய்...'
இசையில் குரலில் வழியும் தாபம்
இசையை தவிர
வைப்பரின் தாளம்

பல வருட உறவு
ஒரு வருட பிரிவு

அருகிருந்தும் ஒரு
மனவிலகல்
ஏதேதோ கற்பிதங்கள்

உண்மைகளை உரத்து
ஒத்துக் கொள்ள
இருவருக்கும் ஏற்பில்லாதவொரு
இடைவெளி

பிரிவின் வருடத்தில்
எத்தனை வலிகள்
அத்தனை வருட
உறவின் மூலமறுக்கும்
வலிகள்
இரவின் நெருக்கமுணர்ந்த
படுக்கையில்
தனியே தனியே
கரைந்து துடைத்த
வலிகள் வலிகள்

'நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தால் தகுமா...'

சகிக்க முடியவில்லை
இந்த மௌனம்

பாடலின் அழகு குறித்து வினவுகிறேன்
அவளின் குரல் உணர்த்தும்
உணர்ச்சி குறிக்காமல்

மிகக் குறுகிய
ஆயினும் மிகநீண்டதோர்
ஆவிநின்ற
இடைவெளிக்குப் பிறகு
தாபமும்
வலியும்
தயையும்
தன்னிரக்கமும் பொதிந்து
'ம்' என்கிறாய்

அத்தனை உணர்வுகளையும்
ஒற்றை அசையில்
ஏற்பதற்கு
கழியும் நொடிகள் நிமிடங்கள்

சாலையில் இருந்து
பார்வையை திருப்பி
உன்னைப் பார்க்கிறேன்
பாடல் நிறைவடைந்தும்
வெளி நிறைந்து கிடக்கிறது

கார் மழையினூடே
விரைந்து கொண்டிருக்கிறது

S. ஜானகியின் சிறந்த பாடல்கள்


ஜானகி பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் சிறந்த பாடல்களை பலர் தொகுத்திருக்கக் கூடும். சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள், திரைஇசை தொழில் நுட்பங்கள் மற்றும் மக்கள் விரும்பிய பாடல்களில் அவரின் பங்களிப்பு என பற்பல வகைகளில் பகுத்திருக்கக் கூடும்.

நானும் என் மனதுக்கு பிடித்த ஜானகியின் தமிழ் திரை இசைப் பாடல்களை தொகுத்திருக்கிறேன். இந்தத் தொகுப்புக்கு மேற்கூறிய எவ்வித மேதைமை பொருந்திய அளவீடுகள் இல்லை. இவை முழுக்க முழுக்க என் கணிப்பில், என் ரசனையின் குறைபட்ட வட்டத்துக்குள் என்னை மகிழ்வுடன் உலவ வைத்த தனித்துவம் கொண்ட பாடல்கள் மட்டுமே.

எனக்குப் பிடித்த ஜானகியின் தமிழ் திரை இசைப் பாடல்களின் பட்டியல்

- என்ன மானமுள்ள பொண்ணுன்னு மதுரையில - சின்ன பசங்க நாங்க


- சின்னத்தாயவள் தந்த ராசாவே - தளபதி


- மெட்டியொலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட - மெட்டி, ராஜாவுடன்


- நதியிலாடும் பூவனம் - காதல் ஓவியம்


- ராசாவே உன்ன நம்பி - முதல் மரியாதை


- தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே -


- கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும் - அவள் ஒரு தொடர்கதை


- பூமாலையே தோள் சேரவா - பகல் நிலவு


- வைதேகி ராமன் கை சேரும் காலம் தை மாத நன்னாளிலே - பகல் நிலவு


- நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை - பாலூட்டி வளர்த்த கிளி


- கனவோடு ஏங்கும் இளம் பூங்கிளி - அன்பே ஓடி வா


- மஞ்சக்குளிச்சு அள்ளி முடிச்சு - பதினாறு வயதினிலே


- புத்தம் புதுக் காலை பொன்னிற வேளை - அலைகள் ஓய்வதில்லை


- பூவே பனிப் பூவே நானும் மலர் தானே -


- நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே - ஆத்மா


- கொத்தமல்லிப் பூவே புத்தம்புது காத்தே - கல்லுக்குள் ஈரம்


- எண்ணத்தில் ஏதோ சில்லென்றது - கல்லுக்குள் ஈரம்


- செந்தூரப்பூவே - பதினாறு வயதினிலே


- குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய் - கவிக்குயில்


- அடடட மாமரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலியே - சிட்டுக்குருவி


- தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் சிந்தும் - நிழல்கள்


- என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது


- பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் - கழுகு


- ஓலைக்குடிசையிலே பழஞ் சேலைக்குள் - ஆனந்த்


- அழகு ஆயிரம் உலகம் முழுவதும் - உல்லாச பறவைகள்


- எந்தப் பூவிலும் வாசம் உண்டு - முரட்டுக் காளை


- அன்னக்கிளி உன்னத் தேடுதே - அன்னக்கிளி


- மச்சானப் பாத்தீங்களா - அன்னக்கிளி


- பொன் வானம் பன்னீர் தூவும் இந்நேரம் -


- நாதம் என் ஜீவனே - காதல் ஓவியம்


- காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே - ஜானி


- வசந்தக் கால கோலங்கள் - தியாகம்


- நதியோடும் கடலோரம் ஒரு ராகம் அலைபாயும் - ஆவாரம்பூ


- பூவரசம்பூ பூத்தாச்சு - கிழக்கே போகும் ரயில்


- இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ - கொக்கரக்கோ


- தாழம்பூவே கண்ணுறங்கு தங்கத்தேரே கண்ணுறங்கு


- வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம் - முதல் மரியாதை


- நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு


- தேன் சிந்துதே வானம் - பொண்ணுக்கு தங்க மனசு


- உள்ளம் எல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குளே ஏதேதோ - தூரத்து இடி முழக்கம்


- சுந்தரி கண்ணால் ஒரு சேதி - தளபதி


- எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ


- சின்னக் கண்ணன் அழைக்கிறான் - கவிக்குயில்


- ஏதோ மோகம் ஏதோ தாகம் - கோழி கூவுது


- நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில்



- காற்றுக்கென வேலி கடலுக்கென்ன மூடி - அவர்கள்


- இப்படியோர் தாலாட்டு பாடவா - அவர்கள்


- நினைத்தாலே இனிக்கும் - நினைத்தாலே இனிக்கும்


- பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் - நினைவில் ஒரு சங்கீதம்


- போட்டேனே பூவிலங்கு - பூவிலங்கு


- வான் மேகங்களே வாழ்த்துங்கள் - புதிய வார்ப்புகள்


- அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை


- மௌமான நேரம் இள மனதில் என்ன பாரம் - சலங்கை ஒலி


- பால கனகமய - சலங்கை ஒலி


- தேவன் கோயில் தீபம் ஒன்று - நான் பாடும் பாடல்


- தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ - தூறல் நின்னு போச்சு


- உறவெனும் புதிய வானில் பறந்ததே இதய மோகம் - நெஞ்சத்தைக் கிள்ளாதே


- அழகிய கண்ணே உறவுகள் நீயே - உதிரிப் பூக்கள்


- வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் வேண்டும் - அவள் அப்படித்தான்


- நான் உந்தன் தாயாக வேண்டும் - உல்லாசப் பறவைகள்


- தேனருவியில் நனைந்திடும் மலரோ - ஆகாய கங்கை


- மலர்களே நாகஸ்வரங்கள் மங்கள தேரில் - கிழக்கே போகும் ரயில்


இந்தப் பட்டியலை எழுதி முடித்துப் வாசித்து பார்க்கையில் சில குறிப்புகள் தோன்றுகின்றன:

- ராஜாவின் இசையில்தான்  ஜானகியின் குரல் வளம், வீச்சு மற்றும் நுட்பம் உச்சத்தில் இருந்திருக்கிறது மற்றும் ராஜா ஜானகியின் திறமையை மிக ரசித்து, தெரிந்து அவரை பாட வைத்திருக்கிறார்

- ராஜா ஜானகிக்கென்றே பாடல்களை உருவாக்கி தந்திருக்க வேண்டும்

- வெற்றி பெற்ற ஜானகியின் பாடல்கள் இரண்டு மூன்று பாடல்களாக சில  வெற்றி  பெற்ற படங்களில் இடம் பெற்றிருக்கின்றன - அவர்கள், கவிக்குயில், தளபதி, உல்லாசப் பறவைகள் - இப்படி

இவற்றில் ஒவ்வொரு பாடலுக்கான என் சுய அனுபவ குறிப்புகளுடன் எழுத வேண்டுமென்ற ஆவலிருக்கிறது. பார்ப்போம்.


Sunday, June 24, 2012

Night Safari @ Singapore


A Scene from Ramayana in the room of Banyan Tree Hotel, Bangkok


நண்பனின் கடிதங்கள் - 6



கூடிக் களித்துக் கொண்டாடி
கூட்டம் தவிர்த்து கூட்டம் போட்டு
வாழ்க்கை வாலிபம் வல்லமை
வையகம் வளர்க்கும் பொய் அகம்

நிஜத்தில் தேங்கும் நிச்சயம் - மற்றும்
நித்தமும் வளர்த்த கங்கணம்
உடைத்துச் சேர்த்த உண்மை - முற்றும்
கடைந்து தேர்ந்த கவிதை

காதல் கோர்த்த கற்பனை
கண்ணில் பார்த்த காலம்
சாதல் ஜெயித்த சகம்
சுகத்தில் லயித்த சுயம்

எல்லாம் நானாய் என்னிலும்...
என்னைப் பார்க்கும் உன்னிலும்...

கடந்த நாட்கள் கவிதைகள் சொல்வன
காவிய வித்தென கடிகளும் சுற்றின

வாழ்ந்த நாட்களை வாழ்ந்த விதமோ
வாழும் நாட்களை வாழும் விதமோ
முரணோ இல்லை முதிர்வெனச் சொன்னால்
உடன்பட நிஜமோ ஒவ்வாதி றக்கும்

பரிணாமம் இதுவோ பரிகாரம் எதுவோ
பரிச்சயம் தோற்பின் பரஸ்பரம் எழுமோ
விதியோ வினையோ வேல்விளை யாட்டோ
இருமுனை கூறெனில் எவர்ஜெயிப் பாரோ

பொய்யல்ல நண்பா இதுநம் இடைத்திரை
போலி மூட்டம் பெரும்பொய் நாடகம்
உடையும் நிஜங்கள் உணர்த்தும் சேதி
உனக்கு மட்டுமா எனக்குந் தானே

போருக்குத் தானே புறப்பட்டு வந்தேன்
போர்க்களம் இன்றோ மனதில் தானே
எந்தச் சிலம்பை எவள் உடைத்தாளோ
இந்தப் பரல்கள் எப்படி வந்தன

சொல்லும் வல்லமை எனக்கிலை தோழா
சொப்பன நிஜங்கள் போதும் போதும்

வந்து போகும் வாழ்க்கை போகும்
தந்து போகும் செல்வம் போகும்
வெந்து போகும் உடலும் போகும்
வேகா நிஜங்கள் போதும் போதும்

- ரமேஷ் சண்முகம்
1990 - 91

மூன்றாம் நாள் உயிர்ப்பு



என் மிச்சங்கள் வேண்டும்
இயேசுவின் கை
அப்பத் துணுக்குகள்
பெருக என்னை
விதையுங்கள்

எல்லாச் சிலுவைகளிலும்
என் குருதி
அத்தனைத் சிரசுகளிலும்
என் முள் கிரீடங்கள்

தவமே இதுவும்

விலாக்காயம் பெருகிவோட
மகிழுங்கள்
கவிழ்த்த மதுக்கோப்பையில்
சாறு பருகி
அப்பம் தின்று
மிச்சம் வீசட்டும்
உங்கள் கைகள்

என்னறிவு யாருக்கென
பகடையுருட்டி
பங்கிடுங்கள்

மிச்சம் பொறுக்கும் கைகளுக்கும்
மீதம் வையுங்கள்

ஆயினும்
கைகழுவி விடாதீர்
என் நண்பரே
உம் கைகளை
அந்தப் பிலாத்துவைப் போல்

- 9/10/89

தொலைந்த விளி


மலட்டுப் பறை முழக்கி
முரண்ட கை பொத்தும்
நார் தேடி உதிர் பூக்கள்
அரற்றும் மணம்
கனவுக் கடைவீதியில்
தொலைந்து போன இது
என் விளி

வருணன் பொய்த்து
வான் நோக்கும்
நனவுப் புழுக்கங்கள்
கிழிந்த சேலையின்
ஊசி நூல் துணுக்குகள்
எச்சில் ஒழுக
திகைத்த குழந்தை
அரற்றும் இறுதியில்
அழும்

விழி வழி வழியும்
விளி
விலாசம் தேடி
விரையும்
விளைவெனில்
வினைஎது

எப்புரையின் குருதி
எவர்கைத் தீர்மானம்

தூரிகை நாரென
கண்ணீர் குழைத்து
உணர்ச்சியற்று பூசி
உன் படம் எழுதும்

உதாசீனப் படுத்து
உவகை கொள்
செவி நிறை
சென்று மறை
ஆயின்
கண்ணீர் நாக்கு உன்
காதுளற
விடை விளித்து போ
என் விளியே

- 8/10/89

Thursday, May 10, 2012

An announcement on Childrens' Films - An Introduction in Chennai by Tamil Studio


தமிழ் ஸ்டுடியோ நடத்தும் "சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா"

இடம்:
Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் நாள்: மே 11 - 12 
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை.
அனுமதி: அனைவருக்கும் இலவசம். 

வணக்கம் நண்பர்களே,

தமிழ் ஸ்டுடியோவின் நீண்ட நாள் கனவான சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை இந்த ஆண்டு நடத்துவதில் முதலில் பெருமை கொள்கிறோம். மாற்று திரைப்படங்களுக்கான ரசனை சிறு வயதில் இருந்தே விதைக்கப்பட வேண்டும். திரைப்படம் என்றால் என்ன என்பதற்கான விளக்கங்கள் இன்னொரு திரைப்படத்தின் மூலமே கொடுப்பது சிறந்தது. எனவே அந்த வகையில் இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை நடத்துவதற்கு தமிழ் ஸ்டுடியோ இசைந்துள்ளது. இந்த ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள Don Bosco Institute of Communication Arts (DBICA) அரங்கில் நடைபெற உள்ளது.

திரையரங்கு போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கு முற்றிலும் நவீன வசதி செய்யப்பட்டுள்ளது. திரைப்பட ரசனையை வளர்ப்பதற்கு பார்க்கப்படும் திரைப்படங்களை நல்ல சூழ்நிலையில் பார்க்க வேண்டும். நல்ல குளிர்ச்சியான இந்த அரங்கில் ஒளி ஒலி வசதியும் அருமையாக உள்ளது. எனவே சிறுவர்கள் உலகப் படங்களை பார்ப்பதற்கு ஒரு அருமையான சூழல் முதலில் உருவாகியுள்ளது என்றே நினைக்கிறேன். மேலும் சிறுவர்களை அவ்வளவு எளிதாக புரியாத மற்ற மொழிப் படங்களை பார்க்க வைத்து விட முடியாது. அதுவும் முற்றிலும் தமிழ் திரைப்படங்களை பார்த்து திரைப்படம் என்றாலே பாட்டு, சண்டை, நகைச்சுவை என்று மூழ்கிப் போயிருக்கும் ஒரு தலைமுறையை அவ்வளவு எளிதாக நாம் உலகப் படங்களை பார்க்க வைத்து விட முடியாது. எனவே சிறுவர்களை முதலில் மனதளவில் அதற்காக தயார் செய்துவிட்டு, தேவைப்படும் நேரங்களில் அவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களையும் (பொழுதுபோக்கு திரைப்படங்கள் அல்ல, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்) அளித்து, சிறுவர்களை உலகப் படங்களை பார்க்க வைக்கவே இந்த முதலாண்டில் முயற்சி செய்கிறோம்.

இந்த பரிச்சார்த்த முயற்சி வெற்றி பெரும் பட்சத்தில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா நடைபெறும். குறிப்பாக ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் சிறுவர்களை அழைத்து வந்து இந்த திரைப்பட திருவிழாவில் கலந்துக் கொள்ள செய்வது இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.

 தமிழில் எல்லாருக்கும் தெரிந்த மாயாஜால கதைகளோ, அறிவுரைக் கதைகளோ, அல்லது சிறுவர்களை வைத்து பெரியவர்களுக்கு கதைசொல்லும் 'பசங்க' போன்ற படங்களோதான் இங்கே சிறுவர் திரைப்படங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் ஸ்டுடியோவின் இந்த சிறுவர் உலகத் திரைப்பட திருவிழாவில் குழந்தைகளை மையமாக வைத்து அவர்களின் வாழ்வியலை, அவர்களின் அழகியலோடு படமாக்கி இருக்கும் உலகப் படங்களே திரையிடப்படவிருக்கிறது.

 இந்த திரைப்பட திருவிழாவில் நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு கலந்துக்கொள்ளுமாறு அன்போடு அழைப்பு விடுக்கிறேன். உங்கள் குழந்தைகளோடு வாருங்கள். அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளையாவது அழைத்து வாருங்கள்.

 இடம்: Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் நாள்: மே 11 -12
 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை.
அனுமதி: அனைவருக்கும் இலவசம்.

திரையிடப்படவிருக்கும் படங்கள் & நிகழ்ச்சிகள்:
முதல் நாள்: (11-05-2012), வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு - தொடக்க விழா (விழாவை தொடங்கி வைப்பவர்களும் குழந்தைகளே)

 நிகழ்வில் நடிகர் சார்லி உலகின் மிக முக்கியமான சிறுவர் திரைப்படங்களை பற்றி பேசுவார்.

காலை 11 மணிக்கு - சிறுவர் சினிமா - நூல் வெளியீடு - ஆழிப் பதிப்பகம் (வெளியிடுபவர்களும் குழந்தைகளே)

11 :30 மணிக்கு: ஆயிஷா - தமிழ் குறும்படம் திரையிடல் - 30 நிமிடம்

12 மணிக்கு: The Kid - Charly chaplin 50: 20

 மதியம் 1:10 மணிக்கு: உணவு இடைவேளை

1.50 மணிக்கு: கதைசொல்லியுடன் ஒரு உரையாடல் (குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி, அந்த கதையின் முடிவிலிருந்து சிறுவர்களே ஒரு புதிய கதையை உருவாக்க செய்யும் நிகழ்வு)

 கதைசொல்லி: சாத்தூர் கருப்பசாமி 

மாலை 3 மணிக்கு: The Way Home - Lee Jeong-hyang - 1.28.13

 மாலை 4.30 மணிக்கு: தேநீர் விருந்து

 மாலை 5 மணிக்கு: LE PAPILLON - Philippe Muyl - 1.19.22

 இரண்டாம் நாள்: (12-05-2012), சனிக்கிழமை காலை

9 மணிக்கு: TAARE ZAMEEN PAR - AAMIR KHAN - 2.42.16

11.50 மணிக்கு: மோர் பரிமாறுதல்

 12 மணிக்கு: வேலு சரவணன் மாணவர்களான "நாடக சாலை" அமைப்பை சார்ந்த அறிவழகன் & சுல்தான் நடத்தும் சுக்கா பக்கா குழந்தைகளுக்கான நாடகம்.

 மதியம் 1:20 மணிக்கு: உணவு இடைவேளை

 2 மணிக்கு: சிறுவர்களுக்கான ஓவியப் பயிற்சி - பயிற்சியாளர் - சாத்தூர் கருப்பசாமி

2.30 மணிக்கு: Blame it on Fidel - Julie Gavras - 1.34.24

4.05 மணிக்கு: தேநீர் விருந்து

4 .20 மணிக்கு: Eternity and a Day - Theodoros Angelopoulos - 2.07.29

6.30 மணிக்கு: Landscape in the Mist - Theodoros Angelopoulos - 2.00.00

இரவு 8 .30 மணிக்கு: நிறைவு விழா.

(நிகழ்வில் குழந்தைகளுக்கு தேவையான கால இடைவெளிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் நிறைய பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் சில விமர்சனங்களுக்கும் இடமுண்டு என்று அறிவேன். ஆனால் சிறுவர்களை உலகப் படங்களை பார்க்க வைப்பதற்கு அவர்களை ஒரு திட மனநிலையில் வைத்தே ஆக வேண்டும். இதன் மூலம் மறுநாளே உலகப் படங்களை தேடித் பார்த்துவிடப்போவதில்லை. ஆனால் அதற்கான விதைதான் இந்த சிறுவர் உலகத் திரைப்பட விழா). எனவே அனைவரும் உங்கள் குழந்தைகளோடு இந்த திரைப்பட திருவிழாவிற்கு வருகை தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நிகழ்விற்கு இடம் தந்து உதவிய DBICA மற்றும், நிதியுதவி அளிப்பதாக சொல்லி இருக்கும் ஆழி செந்தில்நாதன், எஸ்.கே.பி. கருணா (இதில் பங்காற்றிய பவா செல்லதுரை), மற்றும் சிங்கப்பூர் நண்பர் சிவா, எப்போதும் போல் தனது பங்களிப்பை நல்கிய நண்பர் யுகேந்திரன், நண்பர் ஜார்ஜ் ஆகியோருக்கு தமிழ் ஸ்டுடியோவின் நன்றிகள் என்று உரியன. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவோர்: மானசி (பவாசெல்லதுரை மகள்), தமிழ்நிலா (கோவி. லெனின் மகள்) சிறப்பாக ஏற்பாடு செய்யப்படவிருக்கும் இந்த நிகழ்விற்கு அதிகமான நிதியுதவி தேவைப்படுகிறது. நீங்களும் உதவ விரும்பினால் தொடர்பு கொள்ளலாம்.

அருண் மோ. 9840698236

Thursday, March 15, 2012

Vertigo at 60th floor, Banyan Tree, Bangkok - view 1

Posing in front of the impressive work

Vishnu the moderator

Asuras

Impressive depiction of churning Paarkadal - Devas and Asuras at Suvarnabhumi Airport, Bangkok

Footage of the performance

A Thai performer with Santoor

With my friend Karl Jason

Vertigo at 60th floor, Banyan Tree, Bangkok

Vertigo at 60th floor, Banyan Tree, Bangkok - view 6

Vertigo at 60th floor, Banyan Tree, Bangkok - view 5

Vertigo at 60th floor, Banyan Tree, Bangkok - view 4

Vertigo at 60th floor, Banyan Tree, Bangkok - view 3

Vertigo at 60th floor, Banyan Tree, Bangkok - view 2

Pandit Venkatesh Kumar and Raag Hameer