Saturday, October 22, 2011

ஒரு தீபாவளியின் முன்னிரவில்

இறுக்கம் நிறைந்த
மனமுனக்கு

நெகிழ்வே என் தன்மை

கடந்தோடிய வருடங்களில்
உன் இறுக்கத்தை எனக்கும்
என் நெகிழ்வை உனக்கும்
கடத்த
முயற்சித்து வந்திருக்கிறோம்

இறுக்கம் வண்மை தருமென்றும்
நெகிழ்வு இனிமை சேர்க்குமென்றும்
வாதித்திருக்கிறோம்

வெற்றி தோல்வி என்றில்லை
இறுக்கம் நெகிழ்வு
இரண்டும் தேவை
என்று நாங்கள்
அன்று அறிந்திருக்கவில்லை

வரவும் இழப்பும் குறித்த
விவாதங்களில்
கழிந்தன இரவுகள் வருடங்கள்

இன்று
சுற்றமின்றி
பிள்ளைகளுமின்றி
பண்டிகையொன்று நெருங்குகிறது
அமைதியாய்
இறுகிப்போய் காத்திருக்கையில்
கண்களினோரம் கசிவது
நெகிழ்வின்றி வேறென்ன 

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer