Tuesday, October 18, 2011

பொற்கோவின் எதிர்வினை


நண்பர் சரவணன் வரலாற்றை மறைத்து தனக்கு என்ன தேவையோ அதை முன்னிறுத்தி இந்த பதிவை தாங்கள் எழுதியிருப்பதாகவே தோன்றுகிறது. என்று இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதோ அன்று முதல் போராட்டங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. தங்களை போன்றவர்கள் வரலாற்றை திரித்தும் மறுத்தும் செய்திகளை பரப்புவது எந்த எதிர்கால சந்ததியினருக்காக அன்று புரியவில்லை. 

இலவசத்திற்கு ஏங்கி நிற்கிற அவல நிலையில் மக்கள். ஏதோ அந்த மக்கள் நாம் வாழுகிற ஒரு மக்கள் குழுமத்தின் ஒரு அங்கம் என கருதாமல் அவர்கள் இந்த சமுகத்திற்கு பங்கம் என்கிற தொனியில் உங்களது பதிவு அமைந்துள்ளது. மாற்று மின் உற்பத்திக்கு எத்தனையோ மாற்று சக்தியிருப்பதாக பல அறிஞர்கள் கட்டுரைகளாக எழுதி குவித்து இருக்கிறார்கள். படியுங்கள் தயவு செய்து! 

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer