Sunday, May 15, 2011

உயிர்க்கலைஞன்

ராகங்கள் நாவடக்கி 
சேவகம் செய்வதை பார்க்கிறேன்
தனிமனிதன் இசையின்
தரணி ஆள்வதை காண்கையில் 
இவன் எந்த
பரணியில் பிறந்திருப்பான் என
எண்ணத் தோன்றுகிறது

எவருக்கும் இளையாதவனாய்
இசைக்கு மட்டும் வளைபவனாய்
வந்துதித்த தேசத்தில்
வாழ்கின்ற பேறு பெற்ற
எம்மையும்
இசை வந்து தீண்டட்டும்
கருவிகளை இசை
அருவிகளாய் ஆக்குபவனும்
எம் நாத தேவனுமாகிய
இளையராஜா
நீடூழி வாழ்க
நல்லிசை தருக. 

- 23/07/86

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer