Sunday, May 15, 2011

கார்காலம்

 இலைச்சருகுகளில் காற்று
காதல் மொழி பேசும்
கார்காலம் அது.

என் கையிணைந்த அவள் கைகள்
ஒரு காவியசுகம் பிரிவதை 
தடுப்பதைப் போலெனை
அணைக்கின்றன

என் கண்களுக்குள் அவள் தேடல்
இதயச்சுவடிகளை வருடி
இசையாய் இதழ்களை நிறைக்கிறது

காலத்தை
நினைவுகளைப் போல்
தள்ளிவைத்து விட்டோம்

ஊமை மனதாசைகள்
உள்ளுக்குள் இடம்மாறுகின்றன
கரைகள் காலம்கடந்தே தோன்றுகின்றன

அதிகாலைப் பனியின் வெண்மையில்
முகம் பார்க்கும் இயற்கையே
எங்களுடை

இசைக்கனலின் கதகதப்பில்
கேட்காத 
காலத்தின் குளிர்மூச்சுகள்

அவள் கன்னக்கதுப்பில்
நான் வரைந்த கோலங்கள்
எந்த மார்கழிக்கும் சொந்தமில்லை

நாங்கள் நிறைந்து விட்டோம்
வெள்ளம் நுரைத்து படர்ந்தது
படர்ந்த அலைகள்
காதல் காதல் காதல்
என்று கரையை
ஆதுரத்துடன் முத்தமிட்டன

ஒரு முத்துக்காக
இருவரும் மூழ்கினோம்

22/05/1988

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer