Sunday, April 25, 2010

மழைக்கால சுவடுகள் - II

நீ, நான்
உனது, எனது
இந்த மழைக்காலங்கள்

பெரிதாய் விழத்தொடங்கி
உடலதிர ஓடி
இடந்தேடி ஒதுங்குமுன்
அரைகுறையாய் நனைந்து
ஆசையோடு பார்த்து நிற்போம்

நின்று போகும் மழையை
நீ கை நீட்டி பார்க்க
பார்த்த கையை
முகர்ந்தணைத்து
நனைந்து போவோம்
பெய்யாத மழையில்

கை கோர்த்து
முகம் பார்த்து
தோள்சாய்ந்த மடல் பார்த்து
பாதை விலகி
உன் விழிகளுக்குள்
நடந்து கொண்டிருப்பேன்

உன் நாசிநிழல் சொட்டும்
நீர்த்துளி ஏந்தி
காவிரியை சிறைபிடித்ததாய்
மகிழ்வேன்

என் மகிழ்ச்சியை
நீ இரசிப்பாய்

மழை
நின்று போகும்

மழைக்காலங்கள்
திரும்புவதில்லை

- 12/10/91

1 comment:

Kamaraj M Radhakrishnan said...

I really do not know for which i should post comment. Excellent documents. Best wishes

Pandit Venkatesh Kumar and Raag Hameer