Thursday, February 11, 2010

Letters to Jeyamohan - 9

அன்புள்ள ஜெயமோகன்,


தங்கள் மலேசியப் பதிவில் மரபின் மைந்தன் முத்தையா மரபுத் தமிழை சுவைபட பேசி (பாடி?) நீங்கள் ரசித்ததாக எழுதியிருந்தீர்கள். மேலும் தமிழின் சந்தச் சுவையையும் அதன் மூலம் தமிழ் தொடும் நுண் தள சாத்தியங்களையும் சிலாகித்திருந்தீர்கள்.

எனக்கென்னவோ, அந்நிகழ்வின் தாக்கமே ஈராறு கால்கொண்டெழும் புரவியாக கட்டற்று உங்களை, உங்கள் தமிழை பாய வைத்திருக்கிறது இந்தக் கதையில் என்று தோன்றுகிறது. உங்களின் எந்தக் கதையிலும் இல்லாதவோர் நடை. ஒரு வித்தைச் செழுமைக்காக எழுதிப் பார்த்ததிலும் உழைப்பின் தீவிரமும் ஆற்றலும் தெரிகிறது.

"கரஞ்சு விளிச்சா கஞ்சி வந்துடுமுண்ணு குட்டிக நெனைக்கும், நீரு நெனைக்க முடியுமா வேய் ? உம்ம உலகம் மாறியாச்சு. நடந்து வந்திட்டேரு.. இனி நீரு பொறகால போக முடியாது பாத்துக்கிடும்…”- இதைத்தான் பிள்ளை அறிந்து கொண்டு விடாமல் ஜீவனை கடத்தி விட்டாரோ? இன்னொரு இடத்தில், பிள்ளையை நெருஞ்சி முள்ளென்று ஞானமுத்தன் சொல்வான். பிள்ளையின் தீராத அலைச்சல் அவரது குணசித்திரமாக மற்றவர்கள் மூலம் வெளிப்படும் இரு இடங்கள் இவை. தவிர, பிள்ளை அவர்மட்டில், அந்தந்த கணத்தில் அவர் தேடி அலையும் தண்ணீராகட்டும், மனைவியின் சுகமாகட்டும், அந்தத் தேடலில் உண்மையாகவும், கவனச்சிதறலோ ஆன்ம சேதனமோ இல்லாமல் thaan தேடுகிறார்.

மத்தகத்தை விடவும், எழுத்தில் நுணுக்கமாக பல இடங்களில் காமம் விரவிக் கிடக்கிறது. வயது குறைந்து கொண்டே வருகிறது!

நன்றி ஜெயமோகன்

சரவணன்
சிங்கப்பூர்

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer