Sunday, February 7, 2010

சூடிக்கொண்டலையும்

தட்டுத் தடவி நிற்றல்
தள்ளாடி தான் நடை
காத்திருந்தே நிறையும் வயிறு
உடற்சுத்தமோ உதவியோடே
வந்துதித்த நாள்முதல்
சூடிக்கொண்டலையும்
எதிர்பார்ப்புகளினாலும்
ஏமாற்றங்களினாலும்
அருளப்பட்ட
இந்த இடைதூரத்தை
கடக்கும் வழி
உரைக்கக் காத்திருக்கிறாய்
கடந்தும்
வந்துதித்த உன்னிலைபோலும்
இந்நிலைமாறா
என்னால்
எப்படி ஏலும் என

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer