Saturday, January 9, 2010

நிகழ்வு

தலை சாய்க்கவில்லை
இமை செருக இயலவில்லை
உடலறுக்கும்
கவசமன்றி இருப்பதில்லை
கைகளினின்றும்
வாளையும் கேடயத்தையும்
கீழிறக்க இயலுவதில்லை
எப்பொழுதோ
நிகழப் போகுமொன்றுக்காக
எப்பொழுதும்
ஆயத்தமாய் இருப்பது
அலுத்து விட்டது

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer