Friday, January 22, 2010

நித்தியச் சிதறல்

நாமனைவரும்
அன்றாடம் பார்க்கும்
ஒரு முகம்
எப்படியும்
பிறந்தததிலிருந்து
பார்த்திருக்கும்
லட்சக்கணக்கான முகங்களுக்கும்
அதற்கும் வேறுபாடு
ஏதொன்றும் காண்பதற்கில்லை
பாதி செருகிய கண்களோ
அலைபாய்ந்து தோள் புரளும்
கூந்தலோ இல்லை
அபாய ஹஸ்தமும்
சின்முத்திரைகளும் இல்லை
அங்கிங்கு
அலைந்து காணும்
துறவியரின் ஞானியரின்
அடையாளமேதுமில்லை
எதிரமர்ந்திருந்த முகத்தில்
உடலில்
காணும்போதே
கடல் நிலைக்கும்
அமைதி வளரக் கண்டேன்
வண்ண வண்ணக் கொடிகள்
காற்றில் கிழிபட்டு
திருவிழா இரைச்சலில்
நாலாபக்கமும்
பதறிப் பறப்பதுபோல்
துடித்துத் துள்ளும்
என் பிரக்ஞையின்
நித்தியத்தை
நிலைநிறுத்திக் கொண்டு

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer