Saturday, January 9, 2010

ஏது

கண்கள் மூடிக்கொண்டாலும்
கொட்டுகிறது கண்ணீர்
காரணம் தெரிந்தாலும்
ஏற்க மறுக்கிறது மனசு

கப்பிக் கிடக்கும் இருளுக்குள்
கவ்விப் பிடிக்கும் நிசத்தில்
உணர்வே வலியாய்
வலியே சுகமாய்
விடுபட முடியாத
தேவையுமில்லாத
ஒரு
சுயநிர்பந்த சுகமாய்
சகமாய்
பழகிப் போன
இது -
என்
அற்புதங்களில் ஒன்று

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer