Sunday, December 27, 2009

தேடி

உயிரை
உருக்கிக் குடிக்கும்
குளிர் காற்று
எரிச்சலூட்டுகிறது
நச நசத்து ஒழுகும்
மழையின் ஈரம்
சகிக்கவில்லை
புலர்ந்து உலர்த்தும்
வெயிலின் வாடையில்
குமட்டல் கூடும்
மரங்களின் அசைவிலும்
புணர்ச்சியின் சித்திரம்
தலையை பிளக்கும்
அந்த
அதிகாலை குயிலின்
குரல்
கழன்றோடிய
கனவின்
செயற்கை பாதுகாப்பை
தொடையிடுக்கு சூடாய்
நினைவுறுத்தும்

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer