Sunday, August 30, 2009

உன் துணையாய் நான்



ற்றொரு நாள் கழிந்தது
தனிமையில் நான் இன்னும்
எப்படி இது கூடும்
என்னுடன் நீ இல்லாத இத்தனிமை

நீ விடை பெறவுமில்லை

யாரேனும் இது ஏனென்று
கூறுங்கள்

நீ போகத்தான் வேண்டுமா
என்னுலகை குளிர்க்கடலில்
ஆழ்த்தி விட்டு

னியே அமர்ந்து
தினமும் என்னையே நான்
கேட்டு கொள்கிறேன்
எப்படி நேசம்
என் விரல்வழி நழுவியது

ஏதோ என் செவியில்
கூறும் சேதி
நீ தனித்து வாடவில்லை
உன்னுடன் நானிங்கு
எங்கோ வெகு தொலைவில் நீ
ஆயினும்
உன்னுடன் நானிங்கு

ஆயினும்
உன்னுடன் நானிங்கு
தூரங்கள் நம்மை பிரித்தாலும்
என் நினைவில்
நீ மட்டுமே

எனவே
நீ தனிமையில் வாடவில்லை
என்பதை நானறிவேன்

ன்று மற்றொரு இரவு

என்னை உன்னருகில்
வரவழைத்து
நேசத்துடன் அணைக்க வேண்டியதாய்
உன் கண்ணீர்க் குரலை
கேட்டதோர் உணர்வு

உன் வேண்டுதலை
மன்றாடலை நான் கேட்கிறேன்
என் தோள் தாங்கும்
உன் சுமைகள் அன்பே

ஆயினும்
முதலில் உன் கரத்தை
பற்றிக் கொள்ள
அனுமதி

தனியே அமர்ந்து
தினமும் என்னையே நான்
கேட்டு கொள்கிறேன்

எப்படி நேசம்
என் விரல்வழி நழுவியது

ன் நேசத்தை அறிவாய்
என நீ உணர்ந்தாலும்
போதும் அன்பே
உடன் உன்
அருகிருப்பேன்
உன்னுடனிருப்பேன்
(மைக்கேல் ஜாக்சனின் 'You Are Not Alone' என்ற பாடலின் மொழியாக்கம்...)

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer