Monday, June 15, 2009

வளர்சிதை மாற்றம்

வண்ணக் கலவைகளின்
உணர்ச்சித் தகிப்பில்
எரிந்து போகும் சித்திரம்;
சாம்பலை குழைத்தொரு
பாண்டம் வனைய,
சுழற்சியின் உக்கிரத்தில்
சிதைந்து
மறுபடி வண்ணக் கூழாய்
உருகி ஓடும்;

நகர்ந்து அழிந்து விடும்
அந்தக் கணத்துக்குள்
அதை
எப்படியேனும்
வெளிப்படுத்த துடிக்குமென்
அவா

11.15 pm, 18/6/97

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer