Monday, June 15, 2009

பாண்டம் லெக்

நீரலை புரள்கையில்
மயிர் சிலிர்ப்பதாய் - இன்னும்

கட்டில் விட்டிறங்கவில்லை
கை வீசி நடப்பதாய் - இன்னும்

ரணம் ஆறிவிட்டாலும்
மனம் ஆறாமல் - இன்னும்

விரல்கள் தொட்டு அழுத்த
விரையும் போதெல்லாம் - இன்னும்

இன்னும் இன்னும் இன்னும்

இல்லாத உருவம்
இருப்பதாய் எண்ணி...

எண்ணம் வளர்வது போல்
கண்ணிவெடியில் சிதைந்த கால் வளருமோ?

11.30 pm, 16/9/2003

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer