Monday, June 15, 2009

பின்மதியம்

கண்கூச
காய்ந்து கொண்டிருக்கிறது
பின்மதிய வெயில்;
யாருமற்ற
அந்த தெருவில்
டீக்கடையோரமிருந்த
வீட்டுக்குள்ளிருந்து குரல்கள்;

கடந்து போக நேர்ந்த அக்கடையில்
டீக்குடித்து நின்றிருந்தேன்
வெளிவந்த இருவரிடம்
கடைக்காரர் கேட்டார்,
" கால் தரைக்கு மேலே தொங்குதோ?"
"ஆமா, போயிடுச்சு"
"அப்ப கடைய மூடனும்" - என்றார்.

ஏதோவொரு தெரு
ஏதோவொரு வீடென
அனைவரும் நகர
அவனோடு
அந்தரத்தில் தொங்குகிறது
அந்த பின்மதியத்தின் அமைதி

11.00 pm, 16/9/2003

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer