Monday, June 15, 2009

பெண்மை

உன்னை நினைக்கின்றபோது...

சல்லடை வழி
உதிர்கின்ற பூத்துமிகள்

- கனவில்
கனவைப் போலொரு நினைவில்

அத்தனையும்
ஆவியாகிப் போகின்ற வெம்மை

- நினைவில்
நினைவை போலொரு நிகழ்வில்

அண்மையின்
சுகத்தினூடு ஒரு கைப்பு
சேய்மையின்
துயரினூடு ஓர் இனிப்பு...

எண்ணிப் பார்த்திராத
இந்நிற பிரிகையை
என் வானவில்
என்று
எப்படிக் கண்டுபிடித்தேன்?

00.10 AM, 05/06/97

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer