Saturday, February 14, 2009

Letters to Jeyamohan - 2

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களின் 'வேராழம்' கண்டேன். எண்ணக்குவியல்களை கிளறிய பதிவு.

ப்ரீ யு.கே.ஜி காலத்துக்கு முன்பிருந்தே (ஒரு வயது?) என் நினைவுகள் மிகத் துல்லியமாக என்னை தொடர்கின்றன. பெரிதும், என் அம்மா அப்பாவின் நண்பர்கள், நாங்கள் குடியிருந்த அத்தனை வீடுகள், அவற்றின் போர்ஷன்கள், அங்கிருந்த குடும்பங்கள், வீடிருந்த தெருக்கள், மணங்கள், கேட்ட பாடல்கள், வைத்திருந்த பொருட்கள், தோழர் தோழிகள், செய்த பாலியல் சேட்டைகள் (நம்ப மாட்டீர்கள்!), அனைத்தும் - நீங்கள் சொல்வது போல், நினைவு கூர்ந்தால் மீட்டெடுக்க முடியாத வாழ்வின் கட்டமே இல்லை எனலாம். பின்னாளில் இவற்றை நான் சொல்லும் போதெல்லாம், என் தாய் தந்தை தவிர, என் தம்பி ஒரு நம்ப முடியாத பாவனையுடன் கேட்டதும் நினைவில் இருக்கிறது.

தாங்கள் Sigmund Freud படித்திருப்பீர்கள். அவரது வாழ்விலும் நினைவுகள் ஆறு மாதத்தில் துவங்குகின்றன. பெரிதும் அவை பாலியல் அடையாளக் (தன் தாயினதும் உட்பட) கூறுகளை ஆராய்தல், இருப்பை உணர்தல் மற்றும், சூழலின் வகைகளை உணர்தல் என்றே நினைவுகள் ஆரம்பிப்பதாக அவர் கூறியிருக்கிறார். இரண்டு வயதில் மேசை மீதிருந்து கீழே உணவை எடுக்க எட்டி, விழுந்து கீழ் தாடையில் தையல் இட்டதைப் போல.

இளைய பதிவுகள் என்னவோ அனைத்து மாந்தருக்கும் பொதுவென தோன்றுகிறது; ஆயினும், அந்நினைவுகளை பின்னாளில் மீட்டெடுப்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது. அக்காரணங்களையும் அவர் விரிவாக ஆராய்ந்திருக்கிறார் (சில நம்மளவில் ஏற்க முடிவதில்லை என்றாலும்).

சரவணன்

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer